‘குறைகள் சொன்னால் தான் நிவர்த்தி செய்யமுடியும்.. அதனால் தான், நான் எந்தக் கட்சியிலும் இல்லை’: நடிகை வினோதினி பேச்சு
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘குறைகள் சொன்னால் தான் நிவர்த்தி செய்யமுடியும்.. அதனால் தான், நான் எந்தக் கட்சியிலும் இல்லை’: நடிகை வினோதினி பேச்சு

‘குறைகள் சொன்னால் தான் நிவர்த்தி செய்யமுடியும்.. அதனால் தான், நான் எந்தக் கட்சியிலும் இல்லை’: நடிகை வினோதினி பேச்சு

Published Apr 26, 2025 04:12 PM IST Marimuthu M
Published Apr 26, 2025 04:12 PM IST

  • அரசியல் குறித்தும் நடிகர்களின் அரசியல் வருகை குறித்தும் நடிகை வினோதினி பேசியது வைரல் ஆகியிருக்கிறது.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியது குறித்தும் நடிகை வினோதினி டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியானது ஏப்ரல் 25ஆம் தேதியான நேற்று ரிலீஸாகி இருக்கிறது. அதன் தொகுப்பினைப் பார்க்கலாம்.

(1 / 6)

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியது குறித்தும் நடிகை வினோதினி டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியானது ஏப்ரல் 25ஆம் தேதியான நேற்று ரிலீஸாகி இருக்கிறது. அதன் தொகுப்பினைப் பார்க்கலாம்.

'’சினிமாவைத் தாண்டி அரசியலில் தீவிர ஆர்வம் உண்டா?ஆமாங்க. என்னுடைய நலம் விரும்பி நடிகர் ஒருவர் கூட, நீங்க மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வந்தபின்னும் தொடர்ந்து குரல் கொடுத்திட்டே இருக்கீங்க. சினிமாக்காரன் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு இருக்கலாம் என அட்வைஸ் கொடுத்தார். அதை நான் வரவேற்கிறேன்.ஆனால், மனிதர்களை தணிக்கைக்கு உட்படுத்துறவங்க இருக்காங்க. உதாரணத்துக்கு அனுராக் காஷ்யப், சாவித்திரிபாய் புலேவைப் பற்றிப் படம் எடுத்திட்டு, பின் விளைவுகளை சந்தித்தது. எம்புரான் என்னும் படம், பேட் கேர்ள் என்னும் படம் ஆகியப் படங்களுக்கு எதிர்ப்பு வந்துச்சு. ஒரு காலத்தில் ராமாயணத்தை மாற்றி காமெடியாக நாடகம் போட்டிருக்கோம்''.

(2 / 6)

'’சினிமாவைத் தாண்டி அரசியலில் தீவிர ஆர்வம் உண்டா?

ஆமாங்க. என்னுடைய நலம் விரும்பி நடிகர் ஒருவர் கூட, நீங்க மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வந்தபின்னும் தொடர்ந்து குரல் கொடுத்திட்டே இருக்கீங்க. சினிமாக்காரன் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு இருக்கலாம் என அட்வைஸ் கொடுத்தார். அதை நான் வரவேற்கிறேன்.

ஆனால், மனிதர்களை தணிக்கைக்கு உட்படுத்துறவங்க இருக்காங்க. உதாரணத்துக்கு அனுராக் காஷ்யப், சாவித்திரிபாய் புலேவைப் பற்றிப் படம் எடுத்திட்டு, பின் விளைவுகளை சந்தித்தது. எம்புரான் என்னும் படம், பேட் கேர்ள் என்னும் படம் ஆகியப் படங்களுக்கு எதிர்ப்பு வந்துச்சு. ஒரு காலத்தில் ராமாயணத்தை மாற்றி காமெடியாக நாடகம் போட்டிருக்கோம்''.

'இன்றைக்கு அது தவறு, இது தவறுன்னு சொல்ற இடத்துக்கு வந்திட்டாங்க. நான் கலைஞர் என்பதற்கு முன், இந்திய பிரஜை. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த அத்துமீறலுக்கு சிசிடிவி இல்லைன்னு சொல்றாங்க. ஜி.எஸ்.டி. அதிகமாக இருக்கு. குறைகள் சொன்னால் தான், அதை நிவர்த்தி செய்யமுடியும். அதனால் தான், நான் இப்போது எந்தக் கட்சியிலும் இல்லை.இன்னொன்று நான் யார் மனதையும் புண்படுத்தாத வகையில் விமர்சனத்தை எடுத்துவைக்கிறேன். இதை இப்படி செய்திருக்கலாம் என ஒரு கருத்தை எடுத்து வைக்கிறதை எனது கடமை என்று நான் கருதுகிறேன்''

(3 / 6)

'இன்றைக்கு அது தவறு, இது தவறுன்னு சொல்ற இடத்துக்கு வந்திட்டாங்க. நான் கலைஞர் என்பதற்கு முன், இந்திய பிரஜை. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த அத்துமீறலுக்கு சிசிடிவி இல்லைன்னு சொல்றாங்க. ஜி.எஸ்.டி. அதிகமாக இருக்கு. குறைகள் சொன்னால் தான், அதை நிவர்த்தி செய்யமுடியும். அதனால் தான், நான் இப்போது எந்தக் கட்சியிலும் இல்லை.

இன்னொன்று நான் யார் மனதையும் புண்படுத்தாத வகையில் விமர்சனத்தை எடுத்துவைக்கிறேன். இதை இப்படி செய்திருக்கலாம் என ஒரு கருத்தை எடுத்து வைக்கிறதை எனது கடமை என்று நான் கருதுகிறேன்''

'மக்கள் நீதி மய்யத்தில் கமல்ஹாசனுடன் அரசியல் பற்றி பேசும் வாய்ப்பு அமைந்ததா?நிறையபேசியிருக்கோம். ஒரு தடவை போனிலும், மூன்று தடவை நேருக்கு நேர் பேசவும் வாய்ப்பு அமைந்தது. அவர் சொன்னதில் முக்கியமான விஷயம். நாம் செயற்பாட்டாளர்களாக இருக்கக் கூடாது. அரசியல் செய்யவேண்டும் என்பது தான். எனக்கு செயற்பாட்டாளர் மூளை தான் இருக்கு. அதுவும் நான் கட்சியில் இருந்து வெளிவரக் காரணம். ஆனால், கமல்ஹாசன் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அவர் அரசியல் விளையாட்டை விளையாடுகிறார்'.

(4 / 6)

'மக்கள் நீதி மய்யத்தில் கமல்ஹாசனுடன் அரசியல் பற்றி பேசும் வாய்ப்பு அமைந்ததா?

நிறையபேசியிருக்கோம். ஒரு தடவை போனிலும், மூன்று தடவை நேருக்கு நேர் பேசவும் வாய்ப்பு அமைந்தது. அவர் சொன்னதில் முக்கியமான விஷயம். நாம் செயற்பாட்டாளர்களாக இருக்கக் கூடாது. அரசியல் செய்யவேண்டும் என்பது தான். எனக்கு செயற்பாட்டாளர் மூளை தான் இருக்கு. அதுவும் நான் கட்சியில் இருந்து வெளிவரக் காரணம். ஆனால், கமல்ஹாசன் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அவர் அரசியல் விளையாட்டை விளையாடுகிறார்'.

'விஜய் கட்சி ஆரம்பித்தது பற்றி உங்கள் பார்வை என்ன?கலைஞர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். நீங்கள் எடுத்தவுடன் கட்சி ஆரம்பிக்கணும்னு சொல்லல. நீங்கள் தொண்டனாக, சமூக செயற்பாட்டாளராக வரலாம். இவர் எல்லாத்தையும் மீறி கட்சி ஆரம்பித்து வந்திருக்கிறார் சார்.ஒன்று அவருடைய கேரியர். அதில் கிடைக்கும் சம்பாத்தியத்தை விட்டுட்டு வருகிறார்னு சொல்றாங்க. யாரும் அதற்குப் பின், ஒரு திட்டமிட்டுட்டுத்தான் வருவாங்க. இதுக்கு முன்னாடி, அவர் ஒரு 15 வருடங்களாக செயல்பட்டுட்டுத்தான் இன்றைக்கு கட்சி ஆரம்பிச்சிருக்கார். அதைத் தியாகமாகப் பார்க்காமல் மக்களுக்கு சேவை செய்யும் கடமையாகப் பார்க்க வேண்டும்'.

(5 / 6)

'விஜய் கட்சி ஆரம்பித்தது பற்றி உங்கள் பார்வை என்ன?

கலைஞர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். நீங்கள் எடுத்தவுடன் கட்சி ஆரம்பிக்கணும்னு சொல்லல. நீங்கள் தொண்டனாக, சமூக செயற்பாட்டாளராக வரலாம். இவர் எல்லாத்தையும் மீறி கட்சி ஆரம்பித்து வந்திருக்கிறார் சார்.

ஒன்று அவருடைய கேரியர். அதில் கிடைக்கும் சம்பாத்தியத்தை விட்டுட்டு வருகிறார்னு சொல்றாங்க. யாரும் அதற்குப் பின், ஒரு திட்டமிட்டுட்டுத்தான் வருவாங்க. இதுக்கு முன்னாடி, அவர் ஒரு 15 வருடங்களாக செயல்பட்டுட்டுத்தான் இன்றைக்கு கட்சி ஆரம்பிச்சிருக்கார். அதைத் தியாகமாகப் பார்க்காமல் மக்களுக்கு சேவை செய்யும் கடமையாகப் பார்க்க வேண்டும்'.

‘’சினிமாவில் நடிகர் விஜய் மீது இருக்கும் வருத்தம் என்னவென்றால், அவர் மாதிரி ஒரு டான்சர் கிடையாது. மாஸ் என்டெர்டெயின்மென்ட் மற்றும் காமெடி எல்லாம் அவரமாதிரி பண்ணமுடியாது. அதெல்லாம் விட்டுட்டு வந்ததால், அவரது படங்களை இனி பார்க்கமுடியாத சூழல் இருக்கிறது’’ என முடித்தார், நடிகை வினோதினி.

(6 / 6)

‘’சினிமாவில் நடிகர் விஜய் மீது இருக்கும் வருத்தம் என்னவென்றால், அவர் மாதிரி ஒரு டான்சர் கிடையாது. மாஸ் என்டெர்டெயின்மென்ட் மற்றும் காமெடி எல்லாம் அவரமாதிரி பண்ணமுடியாது. அதெல்லாம் விட்டுட்டு வந்ததால், அவரது படங்களை இனி பார்க்கமுடியாத சூழல் இருக்கிறது’’ என முடித்தார், நடிகை வினோதினி.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.

மற்ற கேலரிக்கள்