'ஒரு ரீ-பர்த் கிடைச்சிருக்கு.. கெத்தான ஆண் என்பவர் மனைவி, மகள்களுடைய கனவுகளை நிறைவேற்ற ஆர்வம் காண்பிப்பார்கள்’: சுவாசிகா
- மனைவி, மகள்களுடைய கனவுகளை நிறைவேற்ற ஆர்வம் காட்டும் ஆண்கள் தான் கெத்து என நடிகை சுவாசிகா பளீச் பதில் அளித்து இருக்கிறார்.
- மனைவி, மகள்களுடைய கனவுகளை நிறைவேற்ற ஆர்வம் காட்டும் ஆண்கள் தான் கெத்து என நடிகை சுவாசிகா பளீச் பதில் அளித்து இருக்கிறார்.
(1 / 6)
இயக்குநர் சுந்தரபாண்டி இயக்கிய ’வைகை’ திரைப்படம் மூலம், நடிகையாக அறிமுகமானவர், நடிகை சுவாசிகா. இவரது நிஜப்பெயர், பூஜா விஜய். ஆட்டுப்புரத்து விஜயகுமார் மற்றும் கிரிஜா தம்பதியினருக்கு, கேரளாவின் பெரும்பாவூரில் மகளாகப் பிறந்தவர். பி.ஏ. மலையாள இலக்கியம் படித்த சுவாசிகா, பரதநாட்டியமும் பயின்றவர். ’வைகை’ திரைப்படத்துக்குப் பின், ராசு மதுரவன் இயக்கிய ’கோரிப்பாளையம்’ திரைப்படத்திலும் நடித்தவர். அதன்பின், மைதானம், சாட்டை, கண்டதும் காணாததும், சோக்காலி, அப்புச்சி கிராமம் ஆகியப் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து கவனம் பெற்றார். அதன்பின், தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் மலையாளப் படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார்.
(2 / 6)
அதன்படி, வாசந்தி, கேஸு ஈ வீடின்ட நாதன், ஆராட்டு, சிபிஐ 5, பத்தாம் வளவு, மான்ஸ்டர், குமாரி, ஆட்டோரிக்ஷாக்காரன்டே பாரியா, சதுரம் ஆகிய மலையாளப் படங்களில் அடுத்தடுத்து நடித்து பெயர் பெற்றார். பின், லப்பர் பந்து படம் தந்த வெற்றி, சுவாசிகாவுக்கு தமிழில் மீண்டும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ஆகியோர் லப்பர் பந்து படத்தில் நடித்த நடிகர் தினேஷ் மற்றும் நடிகை சுவாசிகாவின் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
(3 / 6)
இந்நிலையில் ஜே.எஃப்.டபிள்யூ விருது வழங்கும் விழாவில் நடிகை சுவாசிகாவுக்கு, லப்பர் பந்து படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விருதை நடிகர் ஜெயராம் சுவாசிகாவுக்கு வழங்கினார்.
(4 / 6)
அப்போது விருது வென்றபிறகு மேடையில் பேசிய நடிகை சுவாசிகா, ‘’ரொம்பப் பாசம் எனக்கு லப்பர் பந்து படம் மூலம் கிடைச்சிருக்கு. ஒரு மலையாளியா இங்கே தமிழ்நாட்டில் ஒரு அவார்டு வாங்கியிருக்கேன். அதுவும் ஜெயராம் ஏட்டன் கையால் வாங்குனது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.சிறந்த துணை நடிகை என்னும் பிரிவில் வாங்கியது இன்னும் பெருமையாக இருக்கு. லப்பர் பந்து படத்துக்கு கிடைச்ச முதல் அவார்டு இது. அதனால் ஜே.எஃப்.டபிள்யூவுக்கு நன்றி''
(5 / 6)
‘’நான் லப்பர் பந்தில் நடிச்ச ’யசோதா’ கேரக்டரை எல்லோரும் ரசிச்சுப் பார்ப்பாங்க என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. எல்லாம் எதிர்பாராமல் இருக்குது. இப்போ கூட, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் அந்த யசோதா கேரக்டர் பற்றிப் பேசும்போது, ஒரு ரீ-பர்த் கிடைச்சிருக்கு எனக்கு.என்னுடைய இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்துக்கு வாழ்த்துகள். ஒட்டுமொத்த லப்பர் பந்து டீமுக்கு பெரிய நன்றி. அவங்க எனக்கு அவ்வளவு பெரிய சப்போர்ட் பண்ணுனாங்க.நன்றி என்னுடைய புருஷன் பிரேம் ஜேக்கப்புக்கு. என்னுடைய கனவுகள் நிறைவேற உதவி செய்றதுக்கு அவருக்கும் நன்றி. இந்த ஜே.எஃப்.டபிள்யூ விருதை என்னுடைய அம்மாவுக்கு டெடிகேட் பண்றேன்.படத்தில் தான் கெத்து பொண்டாட்டி. இங்கே வந்து நான் பிரேம் பொண்டாட்டி’’ என்றார்.
(6 / 6)
அப்போது, நடிகை சுவாசிகாவிடம் ’ஒரு ஆண்மகன் கெத்தாக இருக்க என்ன விஷயம் செய்யணும்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சுவாசிகா, ’கெத்தான ஆண் என்பவர் அவங்களுடைய மனைவி, மகள்களுடைய கனவுகளை நிறைவேற்ற, அவர்கள் அந்த கனவை துரத்த ஆர்வம் காண்பிப்பாங்க இல்ல, அது யார் காண்பிச்சாலும் கண்டிப்பாக கெத்தாக தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.இங்கு நிறைய நடிகர்களுக்குத் தான் ரசிகர்கள் இருப்பாங்க. நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருந்தால் கெத்துதான்’ என தெரிவித்தார், நடிகை சுவாசிகா.
மற்ற கேலரிக்கள்