Shanthi Williams: ‘ ‘மூடுபனி’ செட்ல தூக்கு போட்ட சேலை.. பாலு மகேந்திரா ஷோபாவ அழிச்சிட்டான்..’ - சாந்தி பகீர் பேட்டி!
“அவள் அப்போது மிகவும் சிறியவள். அவள் என்னுடைய மடியில் ஏறி உட்கார்ந்து கொள்வாள். என்னுடன் விளையாடுவாள். சாக்லேட் கொடுத்தால், வாங்கி சாப்பிட்டுக்கொள்வாள்”- சாந்தி பகீர் பேட்டி!
(1 / 6)
Shanthi Williams: ‘ ‘மூடுபனி’ செட்ல தூக்கு போட்ட சேலை.. பாலு மகேந்திரா ஷோபாவ அழிச்சிட்டான்..’ - சாந்தி பகீர் பேட்டி!
(2 / 6)
Actress shanthi williams: நடிகை ஷோபாவின் இறப்பு குறித்தும், பாலுமகேந்திரா குறித்தும் பிரபல நடிகையான சாந்தி வில்லியம்ஸ், மின்னம்பலம் ப்ளஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
ஷோபா உயிர் போன்றவள் -
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “நடிகை ஷோபா என்னுடைய உயிர் போன்றவள். அப்போது, காமம் குரோதம் மோகம், அக்கிள் தாமா என இரண்டு படங்களை நான் செய்தேன். அக்கிள் தாமா படத்தில் ஷோபா என்னுடைய தங்கையாக நடித்தாள்.அந்த சமயத்தில் எனக்கு 13, 14 வயதுதான் இருக்கும். அந்த படம் செய்யும்பொழுது, நாங்கள் ஓடிப் பிடித்து விளையாடுவோம்.
(3 / 6)
அவள் அப்போது மிகவும் சிறியவள். அவள் என்னுடைய மடியில் ஏறி உட்கார்ந்து கொள்வாள். என்னுடன் விளையாடுவாள். சாக்லேட் கொடுத்தால், வாங்கி சாப்பிட்டுக்கொள்வாள். மூடுபனி படத்தின் படப்பிடிப்பில், கடைசியாக அவள் தூக்கு மாட்டிக் கொண்டாளே, அதே சேலையைத்தான் அவள் உடுத்தியிருந்தாள்; அப்போது நான் அவளிடம், ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்று கேட்டேன்.
(4 / 6)
தற்கொலை செய்து இறந்து விட்டாள் என்று சொன்னவுடன், எனக்கு உயிரே போய்விட்டது
அதற்கு எந்த பதிலும் சொல்லாமல், உதட்டை இடம் பக்கம் நோக்கி இழுத்துக் கொண்டு சோகமாக இருந்தாள். அவள் தற்கொலை செய்து இறந்து விட்டாள் என்று சொன்னவுடன், எனக்கு உயிரே போய்விட்டது. என்னுடைய கணவர் தான் அவருடைய அறையின் கதவை உடைத்து காலெல்லாம் கிழித்துக்கொண்டு, ஆட்களை மேலே ஏற்றி சோபாவை தூக்கு சேலையில் இருந்து, கீழே இறக்கினார்.
(5 / 6)
வில்லியம்ஸூக்கு ஷோபா என்றால் மிக மிக உயிர். ஷோபாவின் குடும்பத்தோடு என்னுடைய கணவர் அவ்வளவு நெருக்கமாக இருந்தார். அவர்கள் வீட்டில் நானும் இன்னொரு மகளாக பார்க்கப்பட்டேன். அவள் இப்படி செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஒருவர் வாழ்க்கை கொடுக்கிறார் என்றால், அதை நல்லபடியாக நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.
(6 / 6)
பாலு மகேந்திரா ஷோபாவை அழித்துவிட்டார்.
அதை விடுத்து அவர்களை அழிக்க கூடாது. ஆனால் பாலு மகேந்திரா ஷோபாவை அழித்துவிட்டார். எனக்கு பாலு மகேந்திராவை பார்த்தாலே பிடிக்காது. அவன் அங்கே வருகிறான் என்றால், நான் முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விடுவேன். அவன்தான் எனக்கு முதல் கேமராமேன்.
நான் விளையாடும் பொழுது என்னை அவன் கேலி செய்வான். கடைசியில் ஷோபாவின் வாழ்க்கைக்குள் அவன் சென்று, அந்த பெண்ணின் வாழ்க்கை காணாமல் போய்விட்டது” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்