நடிகைகள் என்ன பொம்மையா எளிதில் தொட்டுவிட? கடுப்பான நித்யா மேனன்.. அப்படி என்ன நடந்தது?
நடிகைகளை யாரும் சாதாரண பெண்கள் என நினைப்பதில்லை. அவர்கள் எளிதில் தொட்டுவிடும் பொம்மைகளாக நினைக்கின்றனர் என நடிகை நித்யா மேனன் காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
(1 / 6)
நடிகை நித்யா மேனன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பெண் நடிகைகள் குறித்த பார்வை தன்னை சங்கடப்படுத்துவதாக தெரிவித்தார்.
(instagram)
(2 / 6)
சாதாரண பெண்களை நடத்தும் விதத்தில் யாரும் நடிகைகளை நடத்துவதில்லை. நாங்கள் நடிகைகள் என்பதால், எங்களை எளிதில் அணுகலாம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
(instagram)(3 / 6)
நாங்கள் ஒரு நிகழ்வுக்குச் செல்லும்போதெல்லாம், ரசிகர்கள் எங்களை கைகுலுக்கச் சொல்வார்கள். ஆனால், ஒரு சாதாரண பெண்ணிடம் இந்தக் கேள்வியை யாரும் கேட்பதில்லை. நடிகைகளை எளிதில் அணுகலாம் என்ற எண்ணம் பலருக்கு உண்டு எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
(4 / 6)
தொட்டு பேசவும் ஒட்டி புகைப்படம் எடுக்கவும் சுலபமாக நினைக்க நாங்கள் என்ன பொம்மைகளா?" என்றும் காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
(instagram)(5 / 6)
சில நாட்களுக்கு முன்பு, நித்யா மேனன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஒரு ரசிகர் அவரிடம் கைகுலுக்கச் சொன்ன போது, தனக்கு சளி பிடித்திருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார்.
மற்ற கேலரிக்கள்