‘அண்ணே.. அண்ணேன்னு.. மகளுக்கு கொல்லம் அமிர்தானந்தமயி பேர் வச்சதும் ராஜா சார்தான்’ - விவேக் மனைவி எமோஷனல்!
விவேக் சார், ராஜா சாரை சந்தித்து எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். - விவேக் மனைவி!
(1 / 8)
‘அண்ணே.. அண்ணேன்னு.. மகளுக்கு கொல்லம் அமிர்தானந்தமயி பேர் வச்சதும் ராஜா சார்தான்’ - விவேக் மனைவி எமோஷனல்!
(2 / 8)
விவேக் சாருக்கும், ராஜா சாருக்கும் இடையே எப்படியான நட்புறவு இருந்தது குறித்து அவரது மனைவி அருள்செல்வி விவேக் அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.அண்ணன் தம்பி உறவுஇது குறித்து அவர் பேசும் போது, “விவேக் சாருக்கு எப்போதுமே ராஜா சார் மீது தனி பிரியம் உண்டு. அண்ணே..அண்ணே..என்று சொல்லி அவ்வப்போது அவரை சென்று சந்தித்து வருவார். இது எல்லோருக்கும் தெரியாது.
(3 / 8)
உண்மையில் விவேக் சார் ராஜா சாரை தன்னுடைய அண்ணன் போல தான் பாவித்து கொண்டிருந்தார். இளையராஜா சாரின் இசையில் எந்த பாடல் வந்தாலும், அதைக் கேட்டுவிட்டு அவரை நேராக சென்று சந்தித்து அந்த பாடலைப் பற்றி சிலாகித்து பேசுவார். குழந்தை பிறந்து நான் அப்போது என்னுடைய அம்மா வீட்டில் இருந்தேன்.
(4 / 8)
அப்போதுதான் விவேக் சார், ராஜா சாரை சந்தித்து எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
(6 / 8)
அடுத்த நாள் அவர் சென்ற பொழுது, ராஜா சார் அவரது வீட்டு சாமியாறைக்கு சென்று, அங்கிருந்து ஒரு சுருள் ஒன்றை எடுத்து வந்தார்.
மற்ற கேலரிக்கள்