பலானது ஓடத்து மேலே இருக்கட்டும்ன்னு உறுதியா சொன்னது இவர் தான்.. கமல் கூட சண்டையா.. நடிகர் ஜனகராஜ்
- பலானது ஓடத்து மேலே இருக்கட்டும்ன்னு உறுதியா இருந்தது இவர் தான்.. கமல் கூட சண்டையா.. நடிகர் ஜனகராஜ் பேட்டியளித்துள்ளார்.
- பலானது ஓடத்து மேலே இருக்கட்டும்ன்னு உறுதியா இருந்தது இவர் தான்.. கமல் கூட சண்டையா.. நடிகர் ஜனகராஜ் பேட்டியளித்துள்ளார்.
(1 / 6)
இதுதொடர்பாக மே மாதம் 2024ஆம் ஆண்டு இந்தியா கிளிட்ஸுக்கு நடிகர் ஜனகராஜ் அளித்த பேட்டியின் தொகுப்பு இதுதான்..
’நிலா அது வானத்து மேல் எடுக்கப்பட்ட விதம் பற்றி சொல்லுங்கள்?
நாயகன் படத்தில் நிலா அது வானத்து மேல பாட்டுல வந்து, பலானது ஓடத்து மேலே வரிகளைச் சேர்க்கிறது யாருக்குமே பிடிக்கல. அதை இளையராஜா தான் ரொம்ப ஃபீல் பண்ணி, அதை வைக்கணும்னு சொன்னாராம். அது மெட்ராஸ் ஸ்லாங். அந்தப் பாட்டை நான் எங்கே போனாலும் பாடச்சொல்லி கேட்பாங்க. அது மலேசியா போனப்பவும் எனக்கு நடந்தது.
கடலில் நீங்க நடிச்ச அனுபவம் பற்றி சொல்லுங்க?
கொச்சின் கழிமுகத்தில் வைச்சு நிலா அது வானத்து மேல் பாட்டு எடுத்தாங்க. இரண்டு ஷாட் எடுத்து முடிச்சதும் கடலுக்குள் போனோம். அடுத்து எல்லோருக்கும் வாந்தி வந்திடுச்சு. பிறகு கொச்சின் கழிமுகத்தில் வைச்சு பாட்டு முழுக்கையும் எடுத்தாங்க. கடல் வந்து எல்லோருக்கும் ஒத்துக்கிறதாம். அதனால் பலருக்கு வாந்தி வந்திடுச்சு.
(2 / 6)
நாயகன் படத்தில் கமல் சாரும், நீங்களும் சீரியஸாகப் பேசும்போதும் இடையில் காமெடி லைன் இருக்குமே? அது எப்படி சார்?
அது மணிரத்னம் சார் எழுதினது தான். அதை இயல்பா நடிச்சிருப்பேன். மும்பை தாராவி முழுக்க நம்ம பசங்க தான் இருக்காங்க. நாங்க கொஞ்சம் தான் ஹிந்தியில் பேசியிருப்போம்.
(3 / 6)
கவுண்டமணி - செந்திலுக்கு இணையாக டஃப் பைட் கொடுத்தது நீங்கதான்னு சொல்றாங்க?
அப்படியில்லை. கவுண்டமணி - செந்திலுக்கு எழுதினது வீரப்பன் தான் எழுதினார். அவர் யாரை இன்ஸ்பையர் பண்ணி எழுதுறார், அமெரிக்க நடிகர்களான ஸ்டான் லாரல் - ஆலிவர் ஹார்டியை இன்ஸ்பையர் செய்து எழுதுறார். மாலைக்கண் பண்ணுனது எல்லாம் லாரல் - ஹார்டி பண்ணுனது தானே. நான் என்னவென்றால், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டேன். எனக்கு கேரக்டராகத் தான் கொடுப்பாங்க. எனக்கு 10 நாள்கள், 15 நாட்கள் படத்தில் நடிக்கிறதுக்கு கொடுப்பாங்க. அவங்க இரண்டு நாளில் 8 சீன் நடிச்சிட்டு கிளம்பிடுவாங்க. நானும் கவுண்டமணியும் செந்திலும் மூணுபேருமே நடிச்சிருப்போம்.
உங்களது படங்களில் நீங்கள் பேசும் வசனங்கள் பிரத்யேகமாக இருக்கும். அது எப்படி சார்?
நம்ம மெட்ராஸை எடுத்துக்கிட்டாலே, எது வேணும்னாலும் கிடைக்கும். கொஞ்சம் தாண்டி, திருவல்லிக்கேணி பக்கம் போங்க. அங்க பேசுற தமிழ் - உருது கலந்து பேசுறதே கேட்டீங்கன்னா, சிரிச்சே செத்துடுவீங்க. அப்படி பேசுறதுக்கு இப்பவும் ஆட்கள் இருக்காங்க. மயிலாப்பூர் பக்கம் போனால் ஐயர் பேசுறது மாதிரி பேசுவானுங்க. பெரம்பூர் பக்கம்போனால், ஆங்கிலோ இந்தியன்ஸ். வாட் மேன்னு பேசுவாங்க. இந்த மாதிரி மெட்ராஸில் நிறைய விஷயங்கள் இருக்கு.
(4 / 6)
கமல் சார், ரஜினி சார் கூட வொர்க் செய்த அனுபவம் சொல்லுங்க
கமல் சார் கூட ஸ்பாட்டில் சிரிப்பையே பார்க்க முடியாது. சும்மா இருக்கமாட்டார். திடீர்னு ஒரு நிரோத்தை எடுத்துவந்தார். சத்யா படத்தில் நீதான் நாயுடுயா அப்படின்னார். அப்போது எனக்கு நிறைய முடி இருக்கும். அதை சரிசெய்ய தலையில் நிரோத்தை எனக்கு மாட்டிவிட்டு, அடுத்து, தலையில் எனக்கு விக் வைச்சிட்டாங்க. தெலுங்கு நடிகர்கள் எல்லாம் விக் வைச்சு நடிக்கிறாங்க இல்லையா, அதைக் கிண்டல் செய்றதுக்கு எனக்கு அப்படி கெட்டப் போடுறார்.
(5 / 6)
குணா படத்தில் உங்களுக்கும் ஜனகராஜுக்கும் ஒரு சண்டைன்னு சொல்றாங்க. அது பத்தி?
வெளியே என்னவேணும் என்றாலும் சொல்லட்டும். யாருமே தப்பு செய்யவில்லை. டப்பிங் பேச சொல்லும்போது இயக்குநர் ஓ.கே. சொல்லாமல், ஒன் மோர்னு கேட்கக்கூடாது. இந்த மாதிரி 18 ஒன்மோர் கேட்டால் கோபம் வருமா வராதா.. அதனால் சின்ன சண்டை வந்துச்சு அவ்வளவு தான்.
(6 / 6)
பாட்ஷா படத்தில் ஸ்டார் காமெடியாக உங்களுக்கு இருந்துச்சு?
நான் பொதுவாகவே கதை கேட்கமாட்டேன் சார். ரஜினி சார், சுரேஷ் கிருஷ்ணா சொன்னாங்க நடிச்சேன். என்னைப்பொறுத்தவரை கதையே கேட்காமல், ஸ்பாட்டில் சொல்றதை சரியாக செய்திட்டுப் போய்டுவேன். இப்போது தான் கதை கேட்கிறேன். 69 வயதில் தான் கதை கேட்கிறேன்’’ என முடித்தார், நடிகர் ஜனகராஜ்.
நன்றி: இந்தியா கிளிட்ஸ்
மற்ற கேலரிக்கள்