Vastu tips : வீட்டில் இந்த 5 மரங்கள் இருக்கா? உடனே வேரோடு பிடுங்கி எறிந்து விடுங்கள்.. வீட்டில் நிம்மதி இருக்காது!
- Vastu tips : வாஸ்து சாஸ்த்திரப்படி வீட்டில் பணப்பிரச்சனை, கடன்பிரச்சனை, நிம்மதி இல்லாமல் இருக்க இந்த 5 மரங்களும் ஒரு காரணம். எனவே உங்கள் வீட்டில் இந்த மரங்கள் இருந்தால் அகற்றுவது நல்லது.
- Vastu tips : வாஸ்து சாஸ்த்திரப்படி வீட்டில் பணப்பிரச்சனை, கடன்பிரச்சனை, நிம்மதி இல்லாமல் இருக்க இந்த 5 மரங்களும் ஒரு காரணம். எனவே உங்கள் வீட்டில் இந்த மரங்கள் இருந்தால் அகற்றுவது நல்லது.
(1 / 5)
பனைமரம் : வாஸ்துபடி பனைமரம் வீட்டில் இருக்க கூடாது. இது பண பிரச்சனை மட்டும் அல்ல கடன் பிரச்சனையும் ஏற்படுத்திவிடும். இதுதவிர குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே எச்சரிக்கையாக செய்லபடுவது நல்லது.
(2 / 5)
புளியமரம் : வாஸ்து படி வீட்டில் புளியமரம் இருக்க கூடாது. இது வீட்டில் பணம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே புளியமரம் அருகில் உள்ள இடத்தில் வீட்டை கட்டாதீர்கள்.அது உங்களுக்கு தான் பிரச்சனையை ஏற்படுத்தும்.
(Unsplash)(3 / 5)
தென்னை மரம் : வாஸ்து படி வீட்டில் தென்னை மரம் ஒற்றை எண்ணிக்கையில் வைக்க கூடாது. அது உங்களுக்கு பணம் தொடர்பான சிக்கலில் மாட்ட வழிவகுக்கும். எனவே தென்னை மரம் வைத்தால் ஜோடியாக தான் வைக்க வேண்டும். ஒற்றையாக வைத்து விடாதீர்கள்.
(4 / 5)
அரசமரம் : வாஸ்து படி வீட்டில் அரசமரம் இருக்க கூடாது.இது பணவரவை தடுக்க கூடும். பணப்பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே வீட்டில் இந்த மரம் வைப்பதை தவிர்த்து விடுங்கள். அரசமரம் வீட்டில் வளர்க்க கூடாது. ஏன் என்றால் அரசமரம் மிகவும் புனிதமானது. விநாயகர் இந்தமரத்தில் அடியில் அமர்ந்து தான் அனைவரையும் ஆசீர்வசிப்பார். அப்படிப்பட்ட இந்த புனித மரத்தை வீட்டில் முறையாக கவனிக்கவில்லை என்றால் தெய்வ குத்தம் ஆகிவிடும் என்பதால் இதனை வீட்டில் வளர்ப்பது இல்லை.
மற்ற கேலரிக்கள்