‘நீங்கள் பூஜ்ஜியத்திற்கு கீழ் செல்வீர்கள்..’ சொந்த நாட்டை விமர்சித்த பாகிஸ்தான் பேராசிரியர்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ‘நீங்கள் பூஜ்ஜியத்திற்கு கீழ் செல்வீர்கள்..’ சொந்த நாட்டை விமர்சித்த பாகிஸ்தான் பேராசிரியர்!

‘நீங்கள் பூஜ்ஜியத்திற்கு கீழ் செல்வீர்கள்..’ சொந்த நாட்டை விமர்சித்த பாகிஸ்தான் பேராசிரியர்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 24, 2025 12:53 PM IST

‘‘சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீர் இந்தியா மற்றும் இந்துக்களுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தினார், பின்னர் இதுபோன்ற தாக்குதல் நடந்தது, அதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்’’

‘நீங்கள் பூஜ்ஜியத்திற்கு கீழ் செல்வீர்கள்..’ சொந்த நாட்டை விமர்சித்த பாகிஸ்தான் பேராசிரியர்!
‘நீங்கள் பூஜ்ஜியத்திற்கு கீழ் செல்வீர்கள்..’ சொந்த நாட்டை விமர்சித்த பாகிஸ்தான் பேராசிரியர்!

வெறுப்பை வெளிப்படுத்திய பாகிஸ்தான் தளபதி

இதற்கிடையே, இந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் பேராசிரியர் இஷ்டியாக் அகமது பாகிஸ்தான் இராணுவ தளபதியை அம்பலப்படுத்தி கடுமையாக விமர்சித்துள்ளார். "சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீர் இந்தியா மற்றும் இந்துக்களுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தினார், பின்னர் இதுபோன்ற தாக்குதல் நடந்தது, அதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்" என்று அவர் கூறியுள்ளார்.

சீனா நமக்கு அம்மாவா? அவர்கள் நாத்திகர்கள்

மேலும் இஷ்டியாக் அகமது கூறுகையில், "நாங்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி சொல்ல வேண்டிய அவசியம் என்ன? பாகிஸ்தானுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ள நேரத்தில் அவர் இரு தேசக் கோட்பாட்டை வலியுறுத்தினார். அவரிடமிருந்து கவனத்தை திசை திருப்ப அவர் இதைச் செய்தார். அவர்கள் இந்தியாவிலிருந்தும் இந்துக்களிடமிருந்தும் தங்களை வேறுபடுத்திக் காட்டுகிறார்கள், ஆனால் சீனாவுடனான உறவு என்ன என்று அவர் கூறினார். "சீனா நம்ம அம்மா மாதிரி தெரியுதா? அவர்கள் நாத்திகர்கள். அங்கு இஸ்லாம் அழிக்கப்படுகிறது. நீங்கள் அங்கு அமைதியாக இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் பாகிஸ்தானை மீண்டும் சிக்கலில் ஆழ்த்திவிட்டீர்கள். வர்த்தக வழிகள் திறக்கப்பட வேண்டும், இந்தியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வணிகம் இயங்க வேண்டும் என்று எங்களைப் போன்றவர்கள் நினைக்கிறோம்,’’ என்று பேராசிரியர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தவறான செய்கைகள் செய்கிறது

இஷ்டியாக் அகமது கூறுகையில், ‘‘இந்தியாவுடன் 4 போர்கள் நடந்துள்ளன, காஷ்மீரை எங்களால் கைப்பற்ற முடியவில்லை. மாறாக, அவர்கள் தங்கள் சொந்த நாட்டை உடைத்தனர். முழு நாடும் மீண்டும் அவமானப்படுத்தப்படும்,’’ என்று இஷ்டியாக் அகமது கூறினார். மேலும் பாகிஸ்தானை தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று சொல்வார்கள். பாகிஸ்தானில், இராணுவத் தளபதிக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன, அவர் இரு தேசக் கோட்பாட்டைப் பற்றி பேசுகிறார். பாகிஸ்தான் தவறான செயல்களை செய்கிறது. இப்போது இந்தியர்கள் எதிர்வினையாற்றுகிறார்களா அல்லது சகித்துக்கொள்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. இங்கே, பாகிஸ்தான் இராணுவத் தளபதி நாங்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று கூறி, இரு தேசக் கோட்பாட்டை நியாயப்படுத்தினார். அதற்குப் பிறகு, அதுவும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் இருந்தபோதுதான் இந்த தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலின் போது பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவில் இருந்தார். இப்போது சவுதி அரேபியா எங்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை, அதுவே ஜம்மு-காஷ்மீரில் முதலீடு செய்கிறது,’’ என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.

பலுசிஸ்தான் குழப்பத்தை திசை திருப்ப..

பாகிஸ்தான் இராணுவத் தளபதி தன்னை இந்துக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவும், இந்தியாவை வெறுக்கவும் ஒரு உரையை நிகழ்த்தினார், இதனால் உள்நாட்டு மோதல்களைத் தவிர்க்க முடியும் என்று அவர் கூறினார். பாகிஸ்தானுக்குள் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் குழப்பம் நிலவுகிறது, அதிலிருந்து கவனத்தை திசை திருப்ப, பாகிஸ்தான் இராணுவத் தளபதி அத்தகைய அறிக்கையை வெளியிட்டார். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

ராணுவம் சொல்வதை அவர் முன்னெடுத்துச் செல்கிறார். பேராசிரியர் இஷ்டியாக் அகமது கூறுகையில், பாகிஸ்தானில் அரசாங்கத்தை அமைப்பதில் ஒரு விளையாட்டு உள்ளது. ராணுவத்தின் உதவியுடன் வந்துள்ள ஷெபாஸ் ஷெரீப், ராணுவத்திற்கு தலைவணங்குகிறார். "இங்கே இராணுவத் தளபதி ஒரு அறிக்கையை வெளியிட்டார், அப்பாவி சுற்றுலாப் பயணிகள் அங்கு கொல்லப்பட்டனர். இறை பயமும் இருக்க வேண்டும். உலகில் பாகிஸ்தானின் நம்பகத்தன்மை ஏற்கனவே பூஜ்ஜியமாக உள்ளது. இப்போது வரைபடம் பூஜ்ஜியத்திற்கு கீழே செல்லும்,’’ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.