HBD P.V. Narasimha Rao: தென்னிந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த நாள் இன்று
"அவரது தொலைநோக்கு தலைமை இந்தியாவை பொருளாதார ரீதியாக முன்னேறியதாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தது, நாட்டின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்தது" என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விருதை அறிவித்த பிரதமர் மோடி, இந்தியாவை பொருளாதார ரீதியாக முன்னேற வைத்ததில் இவரது பங்களிப்பை அங்கீகரித்தார்.
பிரதமர் மோடி புகழாரம்
"நமது முன்னாள் பிரதமர் திரு பி.வி.நரசிம்மராவ் காருவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு புகழ்பெற்ற அறிஞராகவும், ராஜதந்திரியாகவும், நரசிம்ம ராவ் பல்வேறு பதவிகளில் இந்தியாவுக்கு விரிவாக சேவை செய்தார். ஆந்திராவின் முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் பல ஆண்டுகளாக அவர் செய்த பணிகளுக்காகவும் அவர் நினைவுகூரப்படுகிறார். அவரது தொலைநோக்கு தலைமை இந்தியாவை பொருளாதார ரீதியாக முன்னேறியதாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தது, நாட்டின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்தது" என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.