Kangana Ranaut Video: “பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரிப்பது வருத்தமளிக்கிறது”.. கங்கனா பரபரப்பு குற்றச்சாட்டு - வீடியோ
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kangana Ranaut Video: “பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரிப்பது வருத்தமளிக்கிறது”.. கங்கனா பரபரப்பு குற்றச்சாட்டு - வீடியோ

Kangana Ranaut Video: “பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரிப்பது வருத்தமளிக்கிறது”.. கங்கனா பரபரப்பு குற்றச்சாட்டு - வீடியோ

Karthikeyan S HT Tamil
Published Jun 06, 2024 07:43 PM IST

Kangana Ranaut video: சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்பி கங்கனா ரனாவத்தை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் அறைந்ததாகக் கூறப்பட்ட பின்னர், பஞ்சாபில் வளர்ந்து வரும் "தீவிரவாதம்" மற்றும் "பயங்கரவாதத்தை" எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று கங்கனா கேள்வி எழுப்பியுள்ளார்.

Kangana Ranaut: "பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரிப்பது வருத்தமளிக்கிறது" - கங்கனா ரனாவத் பரபரப்பு குற்றச்சாட்டு
Kangana Ranaut: "பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரிப்பது வருத்தமளிக்கிறது" - கங்கனா ரனாவத் பரபரப்பு குற்றச்சாட்டு

முன்னதாக, நாளை நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்.டி.ஏ) கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு புறப்பட்ட போது, சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர், அவரது கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

கங்கனா வெளியிட்ட வீடியோ

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில், "நான் பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு ஒன்றும் ஆகவில்லை, நான் நன்றாக இருக்கிறேன். சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து நான் வெளியே வந்தவுடன் இரண்டாவது கேபினில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் என் முகத்தில் அறைந்தார்." என்று ரனாவத் அந்த பதிவில் கூறியுள்ளார்.

"பஞ்சாப்பில் தீவிரவாதிகள் அதிகரிப்பு"

"ஏன் இதைச் செய்தீர்கள் என்று நான் அவரிடம் கேட்டபோது, அவர் (சிஐஎஸ்எஃப் அதிகாரி) விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்ததாக என்னிடம் கூறினார். பஞ்சாபில் வளர்ந்து வரும் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பதே எனது (கங்கனா) கேள்வி" என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகளில் தனது தாயும் ஒருவர் என்று சிஐஎஸ்எஃப் பெண் கான்ஸ்டபிள் கூறினார். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்த மூத்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா ரனாவத் கூறிய கருத்துக்களால் சி.ஐ.எஸ்.எஃப் பெண் காவலர் அதிருப்தி அடைந்திருந்ததால் அவர் கங்கனாவை அறைந்ததாக கூறப்படுகிறது.

மண்டி தொகுதியில் வெற்றி பெற்ற கங்கனா

18வது மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இவர், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமோக வெற்றிபெற்றார். கங்கனா 5,37,022 வாக்குகளும், விக்ரமாதித்யா சிங் 4,62,267 வாக்குகளும் பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா என்ட்ரி

அனுராக் பாசுவின் 2006 ஆம் ஆண்டு வெளியான "கேங்ஸ்டர்" படத்தின் மூலம் தனது 17 வயதில் அறிமுகமான ரனாவத், 'குயின்', 'தனு வெட்ஸ் மனு', 'தனு வெட்ஸ் மனு', 'தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்', 'மணிகர்னிகா', 'ஃபேஷன்' மற்றும் 'பங்கா' போன்ற படங்களில் தனது நடிப்பால் பாராட்டுக்களைப் பெற்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.