Veerappan: மானசீக குரு மலையூர் மம்பட்டியான்.. ராஜ்குமார் கடத்தல்.. காவிரி நீருக்காக வைத்த கோரிக்கை.. வீரப்பனின் கதை
Veerappan: மானசீக குரு மலையூர் மம்பட்டியான்.. ராஜ்குமார் கடத்தல்.. காவிரி நீருக்காக வைத்த கோரிக்கை.. வீரப்பனின் கதையை அவரது பிறந்தநாளான இன்று பார்ப்போம்.

Veerappan: தமிழ்நாடு மக்களுக்கு காவிரி பிரச்னை ஏற்படும்போது எல்லாம், சிலருக்கு சந்தனக் கடத்தல் வீரப்பனின் செயல் பற்றி தான் நினைவுக்கு வரும். ஏனெனில் தமிழ்நாடு, கர்நாடக, கேரள எல்லையில் காவல்துறையினரால் 36 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த வீரப்பன், தமிழக மக்களின் பாதுகாவலனாகப் பலரால் கருதப்பட்டார்.
குறிப்பாக, வீரப்பனும் அவனது ஆட்களும் 25 ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தின் காடுகளில் உள்ளூர் பழங்குடியினரின் ஆதரவுடன் வாழ்ந்து அரணாக இருந்தனர்.
இறுதியாக தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகில் 2004ஆம் ஆண்டு, அக்டோபர் 18ஆம் தேதி, தமிழகத்தின் சிறப்பு அதிரடிப் படையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார், வீரப்பன். அவருடன் அவரது சகாக்கள் மூன்று பேரும் கொல்லப்பட்டிருந்தனர். அந்த சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக இருந்தவர் தான், விஜயகுமார் ஐபிஎஸ்.