உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு.. கண்டெய்னரில் சிக்கி இருந்த 9 பேர்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு.. கண்டெய்னரில் சிக்கி இருந்த 9 பேர்

உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு.. கண்டெய்னரில் சிக்கி இருந்த 9 பேர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Mar 02, 2025 05:35 PM IST

உத்தரகண்ட் பனிச்சரிவு: ராணுவம், ஐடிபிபி, விமானப்படை, என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப் இணைந்து பனிச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். தற்போது வரை இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 என உயர்ந்துள்ளது.

உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு.. கண்டெய்னரில் சிக்கி இருந்த 9 பேர்
உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு.. கண்டெய்னரில் சிக்கி இருந்த 9 பேர் (ANI)

இராணுவத்தினர், இந்தோ-திபெத் எல்லை காவல் படை, விமானப்படை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவுடன் உடன் இணைந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிக்கியிருக்கும் நபர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை அனைவரும் ஒருங்கிணைந்து செய்து வருகிறோம்" என தலைமைச் செயலாளர் (பாதுகாப்பு) லெப்டினன்ட் கர்னல் மணீஷ் ஸ்ரீவஸ்தவா இந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க: சீனா எல்லை அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 சுற்றுலா பயணிகள் பலி

உத்தரகண்ட் பனிச்சரிவு குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

1. மனா பகுதியில் எல்லை சாலைகள் அமைப்பு (BRO) பகுதியில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைகளை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தொடர்ந்து இரண்டாவது நாளாக டேராடூனில் உள்ள ஐடி பூங்காவில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று பார்வையிட்டார்.

2. பனிச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட்ட விஜய் பாண்டே ஜோஷிமத் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட. இவர், "பனிச்சரிவு எங்களைத் தாக்கியபோது நாங்கள் கண்டெய்னர் ஒன்றில் இருந்தோம். அந்த கண்டெயினரை பனிச்சரிவு இழுத்துச் சென்றது. நாங்கள் பனியில் சிக்கிக்கொண்டோம் என்பதை உணர்ந்தோம்.

மொத்தம் ஒன்பது பேர் கண்டெய்னரில் இருந்தம் இருந்தோம், அவர்களில் நான்கு பேர் இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

மேலும் படிக்க: 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய ராணுவம் ஏவுகணை சோதனை

3. இந்திய விமானப்படை (IAF) சார்பில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. ட்ரோன் அடிப்படையிலான புதைக்கப்பட்ட பொருள் கண்டறிதல் அமைப்பை விமானத்தில் ஏற்றப்பட்டது. இது தவிர, ஜோஷிமத்தில் இருந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினரின் தகவல் தொடர்பு குழு, காணாமல் போன எல்லை சாலைகள் அமைப்பு ஊழியர்களைத் தேடுவதற்கும் மீட்பதற்கும் மேன் பேக் ரிப்பீட்டருடன் ஸ்ரீ பத்ரிநாத் தாமுக்கு புறப்பட்டது.

4. உத்தரகண்ட் மாநில அரசு ஒரு MI-17 ஹெலிகாப்டர், மூன்று சீட்டா ஹெலிகாப்டர்கள், இரண்டு உத்தரகண்ட் அரசு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு எய்ம்ஸ் ரிஷிகேஷ் ஏர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட விரிவான வான்வழி மீட்பு நடவடிக்கைகளை, பனிச்சரிவில் சிக்கியவர்களை வெளியேற்றும் முயற்சிக்காக பயன்படுத்தியுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பவும் முதல்வர் தாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

5. காணாமல் போன தொழிலாளர்களைத் தேடுவதற்காக சஹஸ்த்ரதாராவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஒரு நிபுணர் குழு அனுப்பப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்பு குழுவின் காவல் ஆய்வாளர் ரிதிம் அகர்வால் தெரிவித்தார்.

மேலும் படிக்க: உத்தரகண்டில் மின் மாற்றி வெடித்த கோர விபத்தில் 10 பேர் பலி

6. மனா பகுதியின் முகாமுக்கு அருகிலுள்ள இராணுவ ஹெலிகாப்டர் தளம் அவசர நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளது.

7. பத்ரிநாத்தில் 6-7 அடி உயரத்துக்கு பனி குவிந்து, பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால், கடுமையான பனிப்பொழிவு தொடர்ந்து சவால்களை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

8. உத்தரகண்ட் துணைப் பகுதி GOC மேஜர் ஜெனரல் பிரேம் ராஜ் மற்றும் பிரிகேடியர் ஹரிஷ் சேத்தி ஆகியோர் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்காக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை (SEOC) பார்வையிட்டனர். முழு ஆதரவை உறுதி செய்தனர்.

9. சமோலி மாவட்ட நீதிபதி சந்தீப் திவாரி கூறும்போது, மீட்கப்பட்ட எல்லை சாலை அமைப்பு (BRO) தொழிலாளர்கள் 24 பேர் ஜோஷிமத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு நபர் முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்குப் பிறகு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் எய்ம்ஸ் ரிஷிகேஷுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

10. உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமி பனிச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதியில் வான்வழி ஆய்வு நடத்தினார். அவர் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் நலம் குறித்து விசாரித்தார்.