தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Uttar Pradesh Boat Accident Death Toll Rises To 11

உத்தரப்பிரதேசம் படகு விபத்து - பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு!

Divya Sekar HT Tamil
Aug 13, 2022 02:19 PM IST

உத்தரப்பிரதேசம் பண்டா நகரத்தில் யமுனை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 11 பேர் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் படகு விபத்து
உத்தரப்பிரதேசம் படகு விபத்து

ட்ரெண்டிங் செய்திகள்

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மற்றவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் உதவித் தொகை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்