தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Uttar Pradesh 10-year-old Boy Killed As Human Sacrifice 3 Nabbed

Crime : என் பையன் நல்லா இருக்கணும்.. சிறுவன் நரபலிக்காக கொலை..விசாரணையில் பகீர்!

Divya Sekar HT Tamil
Mar 27, 2023 10:37 AM IST

உத்தரபிரதேசத்தில் 10 வயது சிறுவன் நரபலிக்காக கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் நரபலிக்காக கொலை
சிறுவன் நரபலிக்காக கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிறுவன் விவேக் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு வயலில் சடலமாக கிடந்தான். தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சிறுவன் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.சிறுவன் கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நரபலிக்காக விவேக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

கொலை செய்யப்பட்ட விவேக்கின் உறவினரான அனூப் என்பவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரது 2 வயது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர். அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குழந்தையின் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் அனூப் அந்த கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு மந்திரவாதியை அணுகி உள்ளார். அவர் சிறுவனை நரபலி கொடுத்தால் உனது குழந்தையின் உடல்நலம் தேறும் எனக் கூறியுள்ளார்.

இதை நம்பிய அனூப் தனது உறவினர் சிந்தாராம் உதவியுடன் சிறுவன் விவேக்கை கடத்தி மண்வெட்டியால் தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அனூப், அவரது உறவினர் சிந்தாராம் மற்றும் மந்திரவாதி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சிறுவன் நரபலிக்காக கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்