நவராத்திரி: ‘வழிபாட்டு தலத்திலிருந்து 500 மீ., தூரத்திற்கு இறைச்சி விற்க தடை’ உபி., யோகி அரசு அதிரடி!
2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மேற்கோள் காட்டி, மதத் தலங்களுக்கு அருகில் சட்டவிரோதமாக விலங்குகளை கொல்வது மற்றும் இறைச்சி விற்பனை செய்வது தடைசெய்யப்படும் என்று யோகி தலைமையிலான உ.பி. அரசு அறிவித்துள்ளது.

நவராத்திரி: ‘வழிபாட்டு தலத்திலிருந்து 500 மீ., தூரத்திற்கு இறைச்சி விற்க தடை’ உபி., யோகி அரசு அதிரடி! (Naeem Ansari )
ஒன்பது நாள் சைத்ர நவராத்திரி விழா தொடங்குவதற்கு முன்னதாக, உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு, சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடவும், மதத் தலங்களிலிருந்து 500 மீட்டருக்குள் இறைச்சி விற்பனையைத் தடை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 6 ஆம் தேதி ராம நவமிக்கு சிறப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், அப்போது விலங்குகளை கொல்வது மற்றும் இறைச்சி விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும் என்றும் PTI அறிக்கை தெரிவித்துள்ளது.