உணவால் வரப்போகும் பேரழிவு - எச்சரிக்கை விடுத்த ஐ.நா !
உணவுத் தட்டுப்பாடு காரணமாக இன்னும் சில வருடங்களில் பல நாடுகளுக்கிடையே பொருளாதார சிக்கல்கள் ஏற்படும்.

<p>உணவுத் தட்டுப்பாடு</p>
ஐ.நா சபையின் பொதுச் செயலாளர், உலகம் கடுமையான உணவு தட்டுப்பாட்டால் பேரழிவைச் சந்திக்கும் என அந்தோணியா குத்தேரசு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், ஐநா சபையின் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. கொரோனா தொற்று, காலநிலை மாற்றம் ஆகியவற்றால் உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவு அதேபோல் பற்றாக்குறை காரணமாகப் பல மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலைமையானது உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக இன்னும் வலுவடைந்துள்ளது. அமெரிக்கா ஆப்பிரிக்கா ஆசியா போன்ற நாடுகளில் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து இன்றியமையாத பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக விவசாயிகள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.