RSS chief Mohan Bhagwat: ‘தேர்தலின் போது அரசியல் கட்சிகள் கண்ணியத்தை கடைப்பிடிக்கவில்லை’-மோகன் பகவத்
Mohan Bhagwat: மோகன் பகவத் தனது உரையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரையும் குறிப்பிட்டார், மாநிலம் ஒரு வருடத்திற்கும் மேலாக அமைதிக்காக காத்திருக்கிறது என்றார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் கண்ணியத்தை கடைப்பிடிக்கவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஒரு உண்மையான சேவகர் (மக்களுக்கு சேவை செய்பவர்) ஒருபோதும் ஆணவத்தைக் காட்ட மாட்டார், பொது வாழ்க்கையில் எப்போதும் கண்ணியத்தை பராமரிக்கிறார் என்று அவர் கூறினார்.
"ஒரு உண்மையான சேவகன் வேலை செய்யும் போது கண்ணியத்தை பராமரிக்கிறான்... ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவன் தன் வேலையைச் செய்கிறான், ஆனால் பற்றற்றவனாக இருக்கிறான். இதை நான் செய்தேன் என்ற ஆணவம் இல்லை. அத்தகைய நபருக்கு மட்டுமே சேவகர் என்று அழைக்கப்பட உரிமை உண்டு" என்று அவர் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் மேற்கோளிட்டுள்ளது.
மோகன் பகவத் தனது உரையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரையும் குறிப்பிட்டார், மாநிலம் ஒரு வருடத்திற்கும் மேலாக அமைதிக்காக காத்திருக்கிறது என்றார்.