Thief: உணவகத்தில் திருட எதுவுமில்லாதபோது, உரிமையாளருக்கு ரூ.20 வைத்துச் சென்ற திருடன்: தெலங்கானாவில் குபீர் சம்பவம்!
Thief: உணவகத்தில் திருட எதுவுமில்லாதபோது, உரிமையாளருக்கு ரூ.20 வைத்துச் சென்ற திருடனின் செயல் பலரையும் நகைப்புக்குள்ளாக்கியுள்ளது. தெலங்கானாவில் தான் இந்த குபீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

Thief: உணவகத்தில் திருட எதுவுமில்லாதபோது, உரிமையாளருக்கு ரூ.20 வைத்துச் சென்ற திருடன்: தெலங்கானாவில் குபீர் சம்பவம்!
Thief: தெலங்கானாவில் ஒரு கொள்ளை முயற்சி பலரையும் ஆச்சரியப்படுத்தியும் சிரிப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது.
திருடச்சென்ற உணவகத்தில் எந்தவொரு பணமும் இல்லாததால், ஏமாற்றமடைந்த திருடன், கடையைவிட்டு வெளியேறுவதற்கு முன்பு மேஜையில் ரூ.20ஐ வைத்துவிட்டுச் சென்ற செயல் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது அதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலரும், அவரை "நேர்மையான திருடன்" எனப் பாராட்டி, சோஷியல் மீடியாவில் கருத்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் அந்த வீடியோ, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை மகிழ்வித்துவருகிறது.
திருடன் செய்தது என்ன?; எங்கு அதைச் செய்தார்?:
தெலங்கானா மாநிலத்தின், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மகேஸ்வரம் என்னும் கிராமத்தில் உள்ள ஒரு உணவகத்துக்குள் இரவு திருடன் ஒருவன் நுழைந்து உள்ளான்.