Tamil News  /  Nation And-world  /  The Mother In Law Made The Daughter In Law Unclothed And Warmed Her Private Parts
வரதட்சணை கொடுமை
வரதட்சணை கொடுமை

Crime: மருமகளின் ஆடைகளை களைந்து அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த மாமியார்! மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சி

26 May 2023, 7:16 ISTPandeeswari Gurusamy
26 May 2023, 7:16 IST

பெண்ணை நிர்வாணப்படுத்தி சூடான இரும்பு கம்பியால் பெண்ணின் உடல் மற்றும் அந்தரங்க உறுப்பில் கொடூரமாக சூடு வைத்துள்ளார். இதனால் வலி தாங்காமல் அந்த பெண் அலறி துடித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் மருமகளின் ஆடைகளை களைந்து அந்தரங்க உறுப்பில் மாமியார் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் விதிஷா என்ற பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவருக்கும், சுகி செவானியா கிராமத்தில் வசிக்கும் இளைஞருடன் திருமணம் நடந்துள்ளது. பெண்ணின் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில் திருமணமாகி சில மாதங்களிலேயே அந்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்துள்ளார். இதனால் கணவருக்கும் மனைவிக்கும் இடையே தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. பலமுறை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சமாதானம் செய்துவைத்தும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தினமும் வீட்டில் நடக்கும் சண்டையால் விரக்தியடைந்த அந்தப் பெண், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மனைவியை காணவில்லை என கணவர் உலர் செவானியா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

மனைவி அவரது தாய் வீட்டில் இருப்பதை அறிந்த மாமியாரும், மைத்துனரும் அந்தப் பெண்ணிடம் சென்று சமாதானமாக பேசியுள்ளனர். குடும்பத்தில் இனிமேல் பிரச்சனைகள் வராதவாறு தாங்கள் நடந்து கொள்வதாக மாமியார் கூறியுள்ளார்.

இந்நிலையில் மாமியாரின் வார்த்தையை நம்பி அந்தப் பெண்ணும் மாமியார் மற்றும் மைத்துனருடன் கணவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு வந்தவுடன் கணவன், மாமியார், மைத்துனர் ஆகியோர் சேர்ந்து அந்தப் பெண்ணை ஒரு நாள் முழுவதும் அறை ஒன்றில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரை சித்திரவதை செய்ய அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி சூடான இரும்பு கம்பியால் பெண்ணின் உடல் மற்றும் அந்தரங்க உறுப்பில் கொடூரமாக சூடு வைத்துள்ளார். இதனால் வலி தாங்காமல் அந்த பெண் அலறி துடித்துள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் கூடி அறையைத் திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து, காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் கணவர், மாமியார் மற்றும் மைத்துனர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து , துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை மற்றும் பிற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்று உள்ள நிலையில் இப்படி பெண்ணை தாக்கி கொடூரமாக அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டாபிக்ஸ்