Old Parliament: ‘நேருவை நினைவுக்கூர்ந்த பிரதமர்! நன்றி தெரிவித்த கார்கே!’ பழைய நாடாளுமன்றத்தில் நெகிழ்சி சம்பவம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Old Parliament: ‘நேருவை நினைவுக்கூர்ந்த பிரதமர்! நன்றி தெரிவித்த கார்கே!’ பழைய நாடாளுமன்றத்தில் நெகிழ்சி சம்பவம்!

Old Parliament: ‘நேருவை நினைவுக்கூர்ந்த பிரதமர்! நன்றி தெரிவித்த கார்கே!’ பழைய நாடாளுமன்றத்தில் நெகிழ்சி சம்பவம்!

Kathiravan V HT Tamil
Sep 19, 2023 01:51 PM IST

“தேசத்தைக் கட்டியெழுப்ப, தேசம், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் ஒன்றாக இருக்க வேண்டும்”

பழைய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டுக்கூட்டத்தில் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் பேசும் பிரதமர் மோடி
பழைய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டுக்கூட்டத்தில் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் பேசும் பிரதமர் மோடி (ANI)

நாடு முன்னேறும் போது அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் நாடாளுமன்ற மரபுகளைப் பாதுகாக்க நாம் உறுதியளிக்க வேண்டும். நமது அரசியல் கட்சிகளை மறந்து, தேசத்தைக் கட்டியெழுப்ப, தேசம், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் ஒன்றாக இருக்க வேண்டும். இதுவே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்ற கார்கே, இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பிஆர் அம்பேத்கர் ஆகியோரின் பங்களிப்புகளையும் காங்கிரஸ் தலைவர் நினைவு கூர்ந்தார்.

நேற்று நடைபெற்ற மக்களவையில் தனது உரையில் நேருவை நினைவுகூர்ந்ததற்காக பிரதமர் மோடிக்கு கார்கே நன்றி தெரிவித்தார். "இந்த சென்ட்ரல் ஹால் பண்டிட் நேருவின் 'டிரிஸ்ட் வித் டெஸ்டினி' உரைக்கு சாட்சியாக இருந்தது, நேற்று, பிரதமர் தனது உரையிலும் இதை குறிப்பிட்டார். வரலாற்று சிறப்புமிக்க உரையை நீங்கள் நினைவுபடுத்தியதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன் என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.