பாகிஸ்தான் நடத்தும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் போராக கருதப்படும் - இந்தியா எச்சரிக்கை
எல்லையில் நிலைமையை பாகிஸ்தான் மேலும் மோசமாக்கியது, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியாவைத் தாக்கியது, இதன் கரணமாகவே இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தத் தூண்டியதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் நடத்தும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் போராக கருதப்படும் - இந்தியா எச்சரிக்கை
மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, பாகிஸ்தானின் தூண்டப்படாத ஆக்கிரமிப்பு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்த நிலையில், நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலும் ஒரு போர்ச் செயலாகக் கருதப்படும் என்று இந்தியா சனிக்கிழமை பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள்மூலம் தெரியவந்துள்ளது.
ஆயுதமேந்திய தாக்குதல் போர் சட்டத்தில் அடங்கும்
ஒரு நாட்டின் இறையாண்மை அல்லது பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அதன் மக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஆயுதமேந்திய தாக்குதல் அல்லது பலத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை போர்ச் சட்டத்தில் அடங்கும்.