Telangana: பொருளாதாரம், வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சாதி வாரி கணக்கெடுப்பு! தெலங்கானா சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Telangana: பொருளாதாரம், வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சாதி வாரி கணக்கெடுப்பு! தெலங்கானா சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

Telangana: பொருளாதாரம், வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சாதி வாரி கணக்கெடுப்பு! தெலங்கானா சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Feb 17, 2024 02:11 PM IST

பீகார், ஆந்திர பிரதேசம் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக சாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான மசோதா தெலுங்கானா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு மசோதா தெலங்கானா சட்டப்பேரவையில் தாக்கல்
சாதிவாரி கணக்கெடுப்பு மசோதா தெலங்கானா சட்டப்பேரவையில் தாக்கல்

கடந்த ஆண்டில் தெலங்கானாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது மாநிலத்தில் சாதி வாரிி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த ஆளும் காங்கிரஸ் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

அதன்படி, இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் சமூக, பொருளாதாரம், கல்வி அடிப்படையிலான வேலைவாய்ப்பை பெற சாதிவாரி கணக்கெடுப்பு வீடு வீடாக சென்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமூக, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் வாய்ப்புகளை உறுதி செய்யும் விதமாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த 4ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த ரெட்டி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாகவும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் நீண்ட காலமாக கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் விவரங்களை பீகார் அரசு வெளியிட்டது . இந்த விவகாரம் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக மீண்டும் அரசியல் கட்சிகளின் கோரிக்கை குரல்கள் எழும்பின.

பீகாரை தொடர்ந்து ஆந்திர பிரதேசம் மாநிலத்திலும் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க முடிவு செய்து, அதுதொடர்பான பணிகளையும் கடந்த நவம்பர் மாதத்தில் மேற்கொண்டுள்ளது.

தற்போது தெலங்கானா அரசும் சாதி வாரி கணக்கெடுப்புக்கான மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9