திரௌபதி முர்முவை கவுரவிக்கும் வகையில் மணல் சிற்பம் - அசத்திய சுதர்சன் பட்நாயக்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  திரௌபதி முர்முவை கவுரவிக்கும் வகையில் மணல் சிற்பம் - அசத்திய சுதர்சன் பட்நாயக்

திரௌபதி முர்முவை கவுரவிக்கும் வகையில் மணல் சிற்பம் - அசத்திய சுதர்சன் பட்நாயக்

Divya Sekar HT Tamil Published Jul 23, 2022 09:13 AM IST
Divya Sekar HT Tamil
Published Jul 23, 2022 09:13 AM IST

பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவை கவுரவிக்கும் வகையில் கண்கவர் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

<p>திரௌபதி முர்மு மணல் சிற்பம்&nbsp;</p>
<p>திரௌபதி முர்மு மணல் சிற்பம்&nbsp;</p>

இதில், பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு 5 லட்சத்து 77 ஆயிரத்து 777 வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹாவை தோற்கடித்தார். ஜூலை 25ஆம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு பாஜக சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிரௌபதி முர்முவை கவுரவிக்கும் வகையில் கண்கவர் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி நகரின் கடற்கரையில் திரௌபதி முர்முவின் மணல் சிற்பத்தை உருவாக்கினார்.

இதனை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர்,'இந்திய மக்களின் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஜி அவர்களது வரலாற்று வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.