Mother Teresa: தொழுநோயாளிகளை அன்பினால் ஆட்கொண்டு சேவை புரிந்த அன்னை தெரசாவின் பிறந்தநாள்
Mother Teresa:தொழுநோயாளிகளை அன்பினால் ஆட்கொண்டு சேவை புரிந்த அன்னை தெரசாவின் பிறந்தநாள் தொடர்பான சிறப்புக்கட்டுரையினைக் காண்போம்.

Mother Teresa: தொழுநோயாளிகளுக்கு அன்பினால் ஆட்கொண்டு சேவை புரிந்த அன்னை தெரசாவின் பிறந்தநாள்
Mother Teresa: ‘அன்பு தான் உனது பலவீனம் என்றால் உலகில் மிகப்பெரிய பலசாலி நீ தான்’ என்ற வரியை உதிர்த்தவர், அன்னை தெரசா, யாருமே நெருங்கி சென்று சிகிச்சையளிக்க தயங்கிய தொழுநோயாளிகளிடம் தயங்காமல் சென்று, தன்னால் இயன்ற சேவைகளை செய்து புகழ் பெற்றவர்.
அடிப்படையில் கிறிஸ்தவ மத அமைப்பின் கன்னியாஸ்திரி சேவையில் ஈடுபட்டாலும் பிற்காலத்தில் அனைத்து வகையான மக்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து உலகப்புகழ் பெற்றவர் அன்னை தெரசா.
அன்னை தெரசா, 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியில் மாசிடோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்பியே எனும் நகரில் பிறந்தார். நிக்கோலாய் போஜோஜியூ, ட்ரெனபிள் போஜோஜியூ இவரின் பெற்றோர் ஆவர். இவருக்கு ஒரு சகோதரனும், சகோதரியும் உள்ளனர்.