Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!’ கர்நாடக அரசியலில் பரபரப்பு!
”பிரிஞ்வெல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் ஹெச்,டி,ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து உள்ளது”

பிரிஞ்வெல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் ஹெச்,டி,ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து உள்ளது.
பாலியல் வீடியோ புகார் தொடர்பான ஆள்கடத்தல் வழக்கில் முன்னாள் பிரதமர் ஹெச்.தேவகவுடாவின் மகனும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்.எல்.ஏவுமான ஹெச்.டி.ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்து உள்ளது.
பாலியல் வீடியோ புகாரில் சிக்கி ஜெர்மனியில் தலைமறைவாக உள்ள ஹாசன் எம்.பி பிரிஜ்வெல் ரேவண்ணா இவரது தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் ஹெச்.டி.ரேவண்ணாவின் மகன் கடத்தல் வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தல் வழக்கை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்தனர்.