HBD Bal Thackeray: மும்பையை ஆட்டி படைத்த பால் தாக்கரே வளர்ந்தது எப்படி?
மகாராஷ்டிர அரசியலில் புயலைக் கிளப்பிய சிவசேனை கட்சியின் நிறுவனத் தலைவர் மறைந்த பால் தாக்கரேவின் பிறந்த தினம் இன்று (ஜனவரி 23).

kaதன் வாழ்நாளில் இறுதிவரை மண்ணின் மைந்தர்கள் மராட்டியர்கள், இந்துத்துவா என்ற கொள்ளையில் இருந்து பின்வாங்காமல் வாழ்ந்து மறைந்த சிவசேனை கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவின் பிறந்த தினம் இன்று. இந்நாளில் அவரும் அவரது கட்சியும் மகாராஷ்டிர அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது இந்த கட்டுரையில் பார்ப்போம்.
தோற்றம்
மகாராஷ்டிர மக்களிடையே இந்துத்துவாக் கொள்கையை தீவிரமாக வேரூன்றியவர் சிவசேனை கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே. 1926, ஜனவரி 23 ஆம் தேதி மகராஷ்டிர மாநிலம் புணேவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் பால் கிஷோர் தாக்கரே. மராத்தி சந்திரசேனிய காயஸ்த பிரபு என்ற முற்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். தந்தையின் ஆழமான அரசியல் கருத்துகளால் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்ட பால் தாக்கரே, 'ஃப்ரீ பிரஸ் ஜர்னல்' இதழில் கார்ட்டூனிஸ்டாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த இதழுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விலகி, மராட்டிய மண்ணின் மைந்தர்கள் என்ற கொள்கையுடன் மும்பையில் 1960-ல் ‘மர்மிக்’ என்ற கேளிச்சித்திர வார இதழை தொடங்கி நடத்தினார்.
கார்ட்டூன்கள் வெளியீடு
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரத்தை குஜராத்திகள், பீகாரிகள் மற்றும் மதராசிகள் என்று அழைக்கப்பட்ட தென்னிந்தியர்கள் தங்கள் கையில் வைத்திருந்தார்கள். சொந்த மண்ணில் மராட்டிய மைந்தர்கள் புறக்கணிக்கப்படுவதாக தனது இதழில் பால் தாக்கரே தொடர்ந்து கார்ட்டூன்களை வெளியிட்டு வந்தார். இதற்கு மராட்டியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் அடுத்தகட்டத்துக்கு தயார் ஆனார் பால் தாக்கரே.