Stock Analysis: ஷேர் வாங்கலாம் வாங்க-1: 'PE Ratio-வை பார்த்து பணத்தை பெருக்குவது எப்படி?’
Stock Analysis: அதிகமாக டிமேட் கணக்குகள் தொடங்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது. சரியான அறிவு மற்றும் உத்தியுடன் அணுகினால் பங்குச் சந்தையில் பணம் அள்ளலாம்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகமாக டிமேட் கணக்குகள் தொடங்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது. சரியான அறிவு மற்றும் உத்தியுடன் அணுகினால் பங்குச் சந்தையில் பணம் அள்ளலாம். பங்குகளை பகுப்பாய்வு செய்வது எப்படி என்பதை இந்த தொடர் விரிவாக விளக்கி பங்கு வர்த்தகத்தில் ஜொலிக்க நம்பிக்கையை அளிக்கும்.
EPS பற்றி அறிவோம்!
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள எல்லா நிறுவனங்களும் லாபம் பார்க்கவே இயங்கி கொண்டு இருக்கின்றது. இந்த நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்தால் முதலீட்டாளர்களுக்கு என்ன கிடைக்கும் என்ற விகிதத்தை ’EPS’ என குறிப்பிடுகின்றனர். ஒரு நிறுவனத்தின் நிகர லாபத்தை அந்த நிறுவனத்தின் பங்குகள் எண்ணிக்கை உடன் வகுக்கும் போது கிடைக்கும் எண் ஆனது EPS என அழைக்கப்படுகின்றது.
உதாரணமாக ’ABC’ என்ற நிறுவனத்திடம் 10 ஆயிரம் பங்குகள் உள்ளது. அந்நிறுவனம் கடந்த காலாண்டில் ஒரு லட்சம் ரூபாய் லாபம் சம்பாதித்து உள்ளது என்று வைத்துக் கொள்வோம். ஒரு லட்சம் ரூபாய் லாபத்தை 10 ஆயிரம் பங்குகளை கொண்டு பிரித்தால் அந்நிறுவனத்தின் EPS மதிப்பு-10 என்று வரும்.