Bhagat Singh: ’ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசை கதறவிட்ட மாவீரன்’ விடுதலை போராட்ட தியாகி பகத்சிங் நினைவுநாள் இன்று!
”பகத்சிங் உள்ளிட்டோரின் தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது மற்றும் சுதந்திரத்திற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த மக்களை ஊக்கப்படுத்தியது”

இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் நினைவுதினம் இன்று (Raminder Pal Singh)
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் விழிப்புணர்வு
பகத் சிங் செப்டம்பர் 28ஆம் தேதி 1907ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள பங்கா என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். அவரது குடும்பத்தில் விடுதலை போராட்டம் மீதான ஈடுபாடு கொண்ட குடும்பமாக விளங்கியது. அவரது தந்தை, கிஷன் சிங் சந்து, மற்றும் மாமா, அஜித் சிங், இருவரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர்கள். பகத் சிங்கின் புரட்சிகர சிந்தனைகளை வடிவமைப்பதில் அவரது குடும்பத்தின் தேசபக்தி முக்கிய பங்கை வகித்தது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
இந்தியர்களின் மனதை ரத்தத்தில் தோய வைத்த கொடூரம் சம்பவமான ஜாலியன் வாலாபாக் படுகொலை பகத் சிங்கை விடுதலை போராட்டத்தை நோக்கி தள்ளியது. ஜெனரல் டயர் தலைமையில் பிரிட்டிஷ் துருப்புக்கள் இந்தியர்களின் மீது நடத்திய கொடூர துப்பாக்கிச்சூடு பகத்சிங்கின் மனதில் ஒரு அழியாத வடுவாக மாறியத்.