பெங்களுரு கூட்ட நெரிசல்: ஆர்சிபி அணியின் மார்கெட்டிங் தலைவர் உள்பட 4 பேர் கைது! முழு விவரம்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  பெங்களுரு கூட்ட நெரிசல்: ஆர்சிபி அணியின் மார்கெட்டிங் தலைவர் உள்பட 4 பேர் கைது! முழு விவரம்

பெங்களுரு கூட்ட நெரிசல்: ஆர்சிபி அணியின் மார்கெட்டிங் தலைவர் உள்பட 4 பேர் கைது! முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Jun 06, 2025 04:40 PM IST

ஜூன் 4 ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீசார் ஆர்சிபியின் மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலேவை கைது செய்துள்ளனர். அவருடன் கைது செய்யப்பட்ட 4 பேர் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களுரு கூட்ட நெரிசல்: ஆர்சிபி அணியின் மார்கெட்டிங் தலைவர் உள்பட 4 பேர் கைது! முழு விவரம்
பெங்களுரு கூட்ட நெரிசல்: ஆர்சிபி அணியின் மார்கெட்டிங் தலைவர் உள்பட 4 பேர் கைது! முழு விவரம்

ஆர்சிபி மார்கெட்டிங் தலைவர் கைது

ஆர்சிபியின் மார்கெட்டிங் மற்றும் வருவாய் தலைவரான மும்பைக்கு பறக்க முயன்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்த நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூன்று ஊழியர்களையும் போலீசார் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூத்த அதிகாரிகள் டிஸ்மிஸ்

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, ஆர்சிபி அணியின் முக்கிய பிரதிநிதிகள், நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) நிர்வாகிகள் ஆகியோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கொலை உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட, சிறிது நேரத்திலேயே இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தா மற்றும் பல மூத்த காவல் அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் சோசலே மற்றும் வெற்றி கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்த டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் மூன்று ஊழியர்களும் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர். டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை சேர்ந்வர்களில் கிரண், சுமந்த் மற்றும் சுனில் மேத்யூ ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அடையாளம் கண்டுள்ளது.

பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு

ஐபிஎல் 2025 தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இதையடுத்து ஐபிஎல் தொடங்கி 18வது ஆண்டில் முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பை வென்றதால் வெற்றி கொண்டாட்டம் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கொண்டாட்டத்தை காண கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதயத்தை நொறுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பெங்களுரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல் (பிரிவு 115), ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தி கடுமையான காயம் ஏற்படுத்துதல் (பிரிவு 118), ஒரு பொது ஊழியரை தனது கடமையிலிருந்து தடுத்தல் (பிரிவு 121), மற்றும் ஐபிசி பிரிவு 190இன் கீழ் சட்டவிரோத கூட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக, வெற்றிக்கொண்டாட்டம் நடைபெற இருந்த சின்னசாமி மைதானத்தில் மொத்தம் 35 ஆயிரம் பேர் வரை மட்டுமே பார்க்க முடியும் என்று இருந்த நிலையில், இலவச பாஸ் போன்ற தவறான வழிகாட்டுதலால் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கு கூடியதால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.