RBI policy: ரெப்போ ரேட்டை மாற்றியிருக்கா ரிசர்வ் வங்கி.. ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியது என்ன?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rbi Policy: ரெப்போ ரேட்டை மாற்றியிருக்கா ரிசர்வ் வங்கி.. ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியது என்ன?

RBI policy: ரெப்போ ரேட்டை மாற்றியிருக்கா ரிசர்வ் வங்கி.. ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியது என்ன?

Manigandan K T HT Tamil
Feb 08, 2024 10:17 AM IST

இந்திய ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை தனது நாணய கொள்கை குழு (எம்.பி.சி) கூட்டத்தில் அதன் முக்கிய பாலிசி விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்திருக்கிறது

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ். (ANI File Photo)

வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எந்தவித மாற்றமுமில்லை என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 8 அன்று நடந்த அதன் கடைசி நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தில், மத்திய வங்கி தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தது. ஆளுநர் சக்திகாந்த தாஸ், நடப்பு நிதியாண்டிற்கான வளர்ச்சிக் கணிப்பினை முந்தைய 6.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.

வளர்ச்சியின் நோக்கத்தை மனதில் கொண்டு, பணவீக்க இலக்கை அடைவதற்கான கொள்கை ரெப்போ விகிதத்தை தீர்மானிக்கும் பொறுப்பு நாணய பொலிசி குழுவிடம் 
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் ஜூலை 2023 இல் 7.44 சதவீதத்தை எட்டிய பிறகு குறைந்துள்ளது, அது இன்னும் அதிகமாக உள்ளது மற்றும் டிசம்பர் 2023 இல் 5.69 சதவீதமாக இருந்தது, இருப்பினும் ரிசர்வ் வங்கியின் ஆறுதல் மண்டலத்தில் 4-6 சதவீதமாக உள்ளது.

கடந்த முறை ரிசர்வ் வங்கி ஆளுநர் என்ன சொன்னார் என்றால், அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், பணவீக்கம் மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றும் கடந்த மாதம் கூறியிருந்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கும் ஆளுநர் பாராட்டு தெரிவித்திருந்தார், அவை இந்திய பொருளாதாரத்தின் நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை உயர்த்தியுள்ளன என்று கூறினார்.

"சந்தைகள் சாதகமாக எதிர்வினையாற்றியுள்ளன. இருப்பினும், புவிசார் அரசியல் அபாயங்கள் மற்றும் காலநிலை அபாயங்கள் கவலைக்குரிய விஷயங்களாக உள்ளன" என்று ஆளுநர் குறிப்பிட்டார். 

நாடாளுமன்றத்தில் தனது இடைக்கால பட்ஜெட் உரையின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதியாண்டில் இந்தியா தனது பட்ஜெட் இடைவெளியை கடுமையாகக் குறைக்கும் என்றும், வளர்ச்சியை இயக்க உள்கட்டமைப்பு மற்றும் நீண்டகால சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தும் என்றும் கூறியிருந்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.