Indian Railways: கன்பார்ம் டிக்கெட் இருந்தால் மட்டுமே ரயில்வே ஸ்டேஷனில் அனுமதி - கூட்டத்தை கட்டுப்படுத்த ரயில்வே முடிவு
இந்தியாவில் உள்ள 60 முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே முழுமையான அணுகல் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கன்பார்ம் முன்பதிவு டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகளை மட்டுமே நடைமேடைகளில் அனுமதிக்கும் விதமாக புதிய முடிவை எடுத்துள்ளது.

கன்பார்ம் டிக்கெட் இருந்தால் மட்டுமே ரயில்வே ஸ்டேஷினில் அனுமதி - கூட்டத்தை கட்டுப்படுத்த ரயில்வே முடிவு
பண்டிகை கால கூட்ட நெரிசல்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் 60 நிலையங்களில் புதிய கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது
கூட்ட நெரிசலை நிர்வகிக்க, இந்த நிலையங்களுக்கு வெளியே நிரந்தர காத்திருப்பு பகுதிகள் உருவாக்கப்படும், பயணிகள் தங்கள் ரயில் வரும்போது மட்டுமே நடைமேடைகளில் ஏற அனுமதிக்கப்படும்.