தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Rahul Gandhi Says, India Will Progress Only When Women Safe

women safe: பெண்கள் பாதுகாப்பே இந்தியாவின் வளர்ச்சி - ராகுல்

Karthikeyan S HT Tamil
Sep 25, 2022 11:39 AM IST

பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் தான் இந்தியா வளா்ச்சி அடையும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளாா்.

ராகுல் நடைபயணம்.
ராகுல் நடைபயணம்.

ட்ரெண்டிங் செய்திகள்

உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக முன்னாள் அமைச்சா் வினோத் ஆர்யாவின் மகன், 19 வயது பெண்ணை கொலை செய்த விவகாரத்தை சுட்டிகாட்டி ராகுல் இவ்வாறு கூறியுள்ளாா்.

ரிஷிகேஷ் அருகே பாஜக முன்னாள் அமைச்சா் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமான சொகுசு விடுதியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த 19 வயது பெண் அங்கிதா பண்டாரி கடந்த 18ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளர் புல்கிட் ஆர்யா மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளாா்.

இதையடுத்து போலீசார் அங்கிதாவை தீவிரமாக தேடிவந்த நிலையில் அந்த பெண்ணின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது வரவேற்பாளர் அங்கிதாவை, புல்கிட் ஆர்யாதான் கொலை செய்தார் என்று தெரியவந்தது. இதையடுத்து புல்கிட் ஆர்யா உள்பட 3 பேரை காவல்துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல், தனது பாதயாத்திரையில் பல துடிப்புமிக்க பெண்களை சந்தித்ததாகவும் அவர்களின் பாதுகாப்பே நாட்டின் வளர்ச்சி என்றும் கூறியுள்ளாா்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்