தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Puduchery Manakula Vinayagai Temple Elephant Dies

Puduvai temple elephant dies: மணக்குள விநாயகர் கோயில் யானை ‘திடீர்’ மரணம்

I Jayachandran HT Tamil
Nov 30, 2022 08:06 AM IST

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி கோவிலுக்கு நடந்து வந்த போது மயங்கி விழுந்து திடீர் உயிரிழந்தது.

உயிரிழந்த யானை லட்சுமிக்கு அஞ்சலி செலுத்தும் பொதுமக்களும் பக்தர்களும்
உயிரிழந்த யானை லட்சுமிக்கு அஞ்சலி செலுத்தும் பொதுமக்களும் பக்தர்களும்

ட்ரெண்டிங் செய்திகள்

மணக்குள விநாயகர் கோயிலுக்கு வரும் பல்லாயிரம் பக்தர்களின் பாசத்திற்குரிய பழகுவதற்கு இனிமையான நல் உள்ளம் கொண்ட லட்சுமி யானை விடியற்காலை நடை பயிற்சிக்காக ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்தது.

அதிர்ச்சியடைந்த பாகன் யானையைப் பரிசோதித்தபோது தனது பாசத்துக்குரிய லட்சுமி யானை அதே இடத்தில் தனது உயிர் பிரிந்து விட்டது தெரிந்ததும் பெரிதும் வேதனைக்கு ஆளானார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை அருள்மிகு மணக்குள விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அன்றுமுதல் இன்று வரை புதுச்சேரி மக்களிடம் பொதுமக்களிடம் அன்பாக பழகக்கூடிய லட்சுமி யானை திடீரென உயிரிழந்ததால் பக்தர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தகவல் கேள்விப்பட்டு லட்சுமி யானையின் உடலுக்கு பக்தர்கள் மாலைகளை செலுத்தி அஞ்சலி செய்தனர். பலர் அந்தக் காட்சியைப் பார்த்து கண்ணீர் விட்டனர்.

யானை லட்சுமிக்கு பக்தர்கள் மாலையணிவித்து அஞ்சலி
யானை லட்சுமிக்கு பக்தர்கள் மாலையணிவித்து அஞ்சலி
IPL_Entry_Point