5 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்.. உத்தரவு பிறப்பித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
கேரளா, ஒடிசா. பிகார், மணிப்பூர், மிசோரம் மாநில ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டின் சில மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி அமைத்தும், புதிதாக சிலரை நியமித்தும் உத்தரவிட்டுள்ளார். மாற்றம் செய்யப்பட்ட ஆளுநர்கள் அனைவரும் நியமன உத்தரவை பெற்று அவர்கள் பதவி ஏற்றுக் கொண்ட நாளில் இருந்து உத்தரவு அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக பிகார் மாநில ஆளுநராக பதவி வகித்தார்.
பிகார் மாநில ஆளுநராக ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கேரளா மாநில ஆளுநராக இருந்தவர்.
மிசோரம் மாநில ஆளுநராக முன்னாள் ராணுவ தளபதி விஜய் குமார் சிங் (வி.கே.சிங் - ஓய்வு) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூர் மாநில ஆளுநராக அஜய் குமார் பல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அம்மாநில ஆளுநராக டாக்டர் ஹரிபாபு கம்பம்படி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக மிசோரம் மாநில ஆளுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்