Fact Check: ஹரியானாவில் பிரதமர் மோடி காலி இருக்கைகளைப் பார்த்து உரையாற்றினாரா? - வைரல் வீடியோவின் உண்மை என்ன?
Fact Check: ஹரியானாவில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி காலி இருக்கைகளை பார்த்து பேசிக்கொண்டிருந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதன் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.

Fact Check: ஹரியானாவில் பிரதமர் மோடி காலி இருக்கைகளைப் பார்த்து உரையாற்றினாரா? - வைரல் வீடியோவின் உண்மை என்ன?
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை (மே 18) ஹரியானா மாநிலம் அம்பலாவில் நடந்த பொதுகூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் மோடி காலி இருக்கைகளை பார்த்து பேசிக்கொண்டிருந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
வைரல் வீடியோ
ஹரியானாவில் பிரதமர் மோடி காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றியதாக வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து ஆய்வு செய்யப்பட்டது.