PM Narendra Modi: 'மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து வருத்தமளிக்கிறது'-பிரதமர் மோடி
Kanchanjunga Express train accident: மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து வருத்தமளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

PM Narendra Modi: 'மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து வருத்தமளிக்கிறது'-பிரதமர் மோடி. (PTI Photo) (PTI)
மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து வருத்தமளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். "தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகளிடம் பேசி, நிலைமையை அறிந்து கொண்டேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்று கொண்டிருக்கிறார்" என்று மோடி எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார்.
திங்கள்கிழமை காலை வடக்கு வங்காளத்தில் சீல்டா செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் (13174) மீது சரக்கு ரயில் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர், மேலும் 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.