‘அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ்.. ஜெய்பீம் கோஷம் போடுகிறது’ பிரதமர் மோடி அட்டாக்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ‘அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ்.. ஜெய்பீம் கோஷம் போடுகிறது’ பிரதமர் மோடி அட்டாக்!

‘அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ்.. ஜெய்பீம் கோஷம் போடுகிறது’ பிரதமர் மோடி அட்டாக்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Feb 06, 2025 06:42 PM IST

மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, பி.ஆர்.அம்பேத்கர் மீது காங்கிரஸ் வெறுப்பை வளர்த்து வருவதாக குற்றம் சாட்டினார்.

‘அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ்.. ஜெய்பீம் கோஷம் போடுகிறது’ பிரதமர் மோடி அட்டாக்!
‘அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ்.. ஜெய்பீம் கோஷம் போடுகிறது’ பிரதமர் மோடி அட்டாக்! (Sansad TV)

காங்கிரஸ் மீது விமர்சனம்

‘‘டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் மீது காங்கிரஸ் எவ்வளவு கோபமும் வெறுப்பும் கொண்டிருந்தது என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பாபா சாஹேப்பை பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்று அவர்கள் ஒருபோதும் கருதவில்லை. லோக்சபா தேர்தலில் அவரை 2 முறை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் இன்று நிர்பந்தங்கள் காரணமாக அவர்கள் ஜெய் பீம் கோஷங்களை எழுப்ப வேண்டியுள்ளது,’’ என்று மோடி பேசினார்.

பாபாசாகேப் அம்பேத்கரின் கனவுகளை பிரதமர் முத்ரா திட்டத்தின் மூலம் தனது அரசு நனவாக்கி வருவதாகவும் மோடி பெருமையுடன் தெரிவித்தார்

அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம்

இதற்கிடையே, குடியரசு தினத்தன்று அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து 6 பேர் கொண்ட குழு தனது விசாரணை அறிக்கையை வியாழக்கிழமை சமர்ப்பித்தது. அமிர்தசரஸில் உள்ள அந்த சிலையின் மீது ஏறி இளைஞர் ஒருவர் சுத்தியலால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி அரசியல் விமர்சன மோதலை ஏற்படுத்தியது.

மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி.நட்டா ஜனவரி 31 அன்று இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்திருந்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.