PM Modi: ஜகார்த்தா முருகன் கோயில் குடமுழுக்கு.. முருகனுக்கு அரோகரா எனக்கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Modi: ஜகார்த்தா முருகன் கோயில் குடமுழுக்கு.. முருகனுக்கு அரோகரா எனக்கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

PM Modi: ஜகார்த்தா முருகன் கோயில் குடமுழுக்கு.. முருகனுக்கு அரோகரா எனக்கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Marimuthu M HT Tamil
Feb 02, 2025 07:27 PM IST

PM Modi: ஜகார்த்தா முருகன் கோயில் குடமுழுக்கு.. முருகனுக்கு அரோகரா எனக்கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி குறித்துப் பார்ப்போம்.

PM Modi: ஜகார்த்தா முருகன் கோயில் குடமுழுக்கு.. முருகனுக்கு அரோகரா எனக்கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
PM Modi: ஜகார்த்தா முருகன் கோயில் குடமுழுக்கு.. முருகனுக்கு அரோகரா எனக்கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் கட்டப்பட்ட முருகன் கோயிலின் குடமுழுக்கு இன்று (பிப்ரவரி 2ஆம் தேதி) நடைபெற்றது.

அதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதில், இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையேயான கலாசார மற்றும் ஆன்மிக உறவுகளை எடுத்துரைத்தார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீசனாதன தர்ம ஆலயம் என்கிற முருகன் ஆலய மகாகும்பாபிஷேகத்தில் மெய்நிகர் முறையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் இந்தோனேஷியா இடையிலான புவியியல் தூரம் இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு வலுவாக உள்ளது என்றும்; இது பாரம்பரியம், வரலாறு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.

இந்தியாவும் இந்தோனேசியாவும் கலாசாரத்துடன் தொடர்பு உடையவர்கள்: பிரதமர் மோடி

இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசும்போது முருகனுக்கு அரோகரா எனக் கூறி தன் பேச்சைத் தொடங்கினார். அதில், "ஜகார்த்தாவில் உள்ள முருகன் கோயிலின் மகா கும்பாபிஷேகத்தின் ஒரு பகுதியாக நான் மாறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஜகார்த்தாவிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன்.

ஆனால், இந்தியாவும் இந்தோனேசியாவும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதைப் போலவே என் மனமும் அதற்கு நெருக்கமாக உள்ளது. மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு அங்குள்ள அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியா மற்றும் இந்தோனேசிய மக்களுக்கு, எங்கள் உறவுகள் புவிசார்ந்து மட்டுமல்ல, நாங்கள் கலாசாரத்துடன் தொடர்புடையவர்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுடன் நாம் தொடர்புடையவர்கள். எங்கள் உறவு பாரம்பரியம், அறிவியல், நம்பிக்கை மற்றும் ஆன்மிகம் தொடர்பானது" என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

ஜகார்த்தா முருகன் கோயிலின் சிறப்புகள்:

ஸ்ரீ சனாதன தர்ம ஆலயம் என்று அழைக்கப்படும் ஜகார்த்தா முருகன் கோயில், 40 மீட்டர் உயரமுள்ள ராஜ கோபுரத்தையும், அதன் முன்புறத்தில் 20 மீட்டர் உயரமுள்ள முருகன் சிலையும் கொண்டது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

இக்கோயிலில் 1,200 பேர் அமரக்கூடிய பல்நோக்கு மண்டபம், திருவள்ளுவர் மண்டபம், மொழிகளுக்கான வகுப்பறை மற்றும் இந்து கலாசார மற்றும் நாட்டுப்புற - நடன மையங்கள், இந்தோனேசியாவில் உள்ள இந்திய கலாசார அருங்காட்சியகம், யோகா மற்றும் தியான அறைகள், போக்குவரத்து இடம், பெரிய மற்றும் சிறிய சந்திப்பு அறைகள், இலவச இயற்கை சிகிச்சை கிளினிக், மளிகை கடை, சிறிய மற்றும் பெரிய கிடங்கு, சுமார் 2000 இந்து மத புத்தகங்களுக்கான நூலகம் மற்றும் குருகுல இல்லம் ஆகியவை கோயிலின் முக்கிய வசதிகளாகும்.

இந்திய துணைத்தூதரகத்தின் கருத்து:

இந்தோனேசியாவின் மேடானில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் கூற்றுப்படி, ‘’இந்தியாவும் இந்தோனேசியாவும் இரண்டாயிரம் ஆண்டுகளாக நெருங்கிய கலாசார மற்றும் வணிக தொடர்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்து, பௌத்த மற்றும் பின்னர் முஸ்லிம் நம்பிக்கை ஆகியவை இந்தியாவின் கடற்கரையிலிருந்து இந்தோனேசியாவுக்கு பயணித்தன.

இராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் சிறந்த காவியங்களின் கதைகள் இந்தோனேசிய நாட்டுப்புற கலை மற்றும் நாடகங்களுக்கு ஆதாரமாக அமைகின்றன.

பகிரப்பட்ட கலாசாரம், காலனித்துவ வரலாறு மற்றும் அரசியல் இறையாண்மை, பொருளாதார தன்னிறைவு மற்றும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றின் சுதந்திரத்திற்குப் பிந்தைய இலக்குகள் இருதரப்பு உறவுகளில் ஒன்றிணைக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன'' எனத் தெரியப்படுத்தியிருக்கிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.