Pitbull Dog : ஐயோ.. அந்தரங்க உறுப்பை கடித்த பிட்புல் நாய்..கதறி துடித்த இளைஞர்!
Haryana Pitbull Dog : 30 வயது நபரின் அந்தரங்க உறுப்பை பிட்புல் இன நாய் கடித்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக பிட்புல் இன நாய்களின் தாக்குதல் அதிகரித்து இருந்தது. கடந்த வருடம் உத்தரப் பிரதேசம் கைசர்பாக் பகுதியைச் சேர்ந்த 82 வயது முதியவர் சுசீலா திரிபாதி என்பவரை அவரது வீட்டிலேயே வளர்த்து வந்த பிட்புல் நாய் கடித்துக் கொன்றது. அதேபோல பஞ்சாபில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட பிட்புல் நாய் 13 வயது சிறுவனின் காதை கடித்துத் துப்பியது. இது பிட்புல் இன நாயை வைத்திருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ட்ரெண்டிங் செய்திகள்
தற்போது அதே போல ஒரு சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நேற்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கர்னல் மாவட்டத்தின் பிஜ்னா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான கரண். இவர் வழக்கம் போல தனது வயலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது தெருவில் சுற்றித் திரிந்த பிட்புல் வகை நாய் ஒன்று கரணை நோக்கி பாய்ந்துள்ளது.
நாய் அவர் மீது பாய்ந்ததும் என்ன செய்வது என்று அறியாமல் கரண் அருகில் இருந்த குச்சி மூலம் அடித்து விரட்ட முயன்றுள்ளார். அப்போது அந்த நாய் அவரது அந்தரங்க உறுப்பை கடித்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கரணை அப்பகுதி மக்கள் மீட்டு கர்னல் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரண் தாக்கப்பட்ட சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு அந்த நாய்யை கம்பால் அடித்து கொன்றனர். இந்த நாயிடம் ஏற்கனவே ஒருவர் கடிபட்டுள்ளதாகவும் ஊர் மக்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறை வழக்கு பதிவு செய்து கரண் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்