PFI Case: SDPI தேசிய தலைவர் எம்.கே.ஃபைஸி காவல் நீட்டிப்பு.. டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
PFI Case: எஸ்டிபிஐ தேசிய தலைவர் எம்.கே.ஃபைஸியின் அமலாக்கத்துறை காவலை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம்.

எஸ்.டி.பி.ஐ., அலுவலகத்தில் நடந்த சோதனை. கோப்புப்படம் (PTI)
PFI Case: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சட்டவிரோத பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைசியின் அமலாக்கத்துறை காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவலை ஐந்து நாட்கள் நீட்டிக்கக் கோரிய அமலாக்கத்துறையின் மனுவில் கூடுதல் அமர்வு நீதிபதி சந்தர் ஜித் சிங் காவலை நீட்டித்தார். இந்த வழக்கில் பணப்புழக்கம் மற்றும் சதியை கண்டுபிடிக்க அமலாக்க இயக்குநரகம் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை ஏற்று மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றம் ஃபைசியை காவலில் வைக்க உத்தரவிட்டது.
