Pema Khandu sworn in as Arunachal CM: அருணாச்சல பிரதேச முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் பெமா காண்டு
Pema Khandu: அருணாச்சல பிரதேசத்தில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக பெமா காண்டு புதன்கிழமை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், இது அவர் முதல்வராக பதவியேற்க வழி வகுத்தது.

Pema Khandu sworn in as Arunachal CM: அருணாச்சல பிரதேச முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் பெமா காண்டு (Pema Khandu-X)
அருணாச்சலப் பிரதேச மாநிலம், இட்டாநகரில் உள்ள டி.கே மாநில மாநாட்டு மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பெமா காண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக அருணாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார். அவருடன், பாஜகவின் சௌனா மெய்ன் இரண்டாவது முறையாக துணை முதல்வராக பதவியேற்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பிற பிரமுகர்கள் முன்னிலையில் அருணாச்சல பிரதேச ஆளுநர் கே.டி.பர்நாயக், பெமா காண்டு மற்றும் 11 அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
10 அமைச்சர்களும் பதவியேற்பு
மேலும் 10 அமைச்சர்களும் புதிய அமைச்சரவையில் பதவியேற்றனர்.
