'பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த ராணுவ நடவடிக்கை தீர்வாகாது': எல்லை பதற்றம் குறித்து மெகபூபா கருத்து
"நமது நாடு உலகில் ஒரு பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது, பாகிஸ்தானில் உள்நாட்டு நிலைமை நன்றாக இல்லை. எனவே, இரு நாடுகளும் அரசியல் தலையீட்டை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். இராணுவத் தலையீட்டால் எதையும் சாதிக்க முடியாது" என்று மெஹபூமா கூறினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளை தீர்க்க அரசியல் தலையீடு தேவை என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். “பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த ராணுவ நடவடிக்கை தீர்வாகாது” என்றும் எல்லை பதற்றம் குறித்து மெகபூபா கருத்து தெரிவித்தார்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், இரு நாடுகளின் தலைவர்களும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஒருவருக்கொருவர் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
"புல்வாமா மற்றும் பஹல்காம் ஆகியவை இரு நாடுகளையும் பேரழிவின் விளிம்பில் கொண்டு வந்த இரண்டு சம்பவங்கள். இது இப்படியே தொடர்ந்தால், முழு உலகிற்கும் ஆபத்து ஏற்படும். கார்கில், புல்வாமா, பஹ்லகம் அல்லது பதான்கோட் என எதுவாக இருந்தாலும், ஒரு இராணுவ நடவடிக்கை நடக்கும்போதெல்லாம், அது அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கிறது, பிரச்சினையின் மூல காரணத்திற்கு சிகிச்சையளிக்காது. இது எந்த தீர்வையும் கொண்டு வராது, நிரந்தர அமைதியை பராமரிக்க உதவாது" என்று மெஹபூமா கூறினார்.