அமிர்தசரஸில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான்! சுட்டு வீழ்த்திய இந்தியா
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள காசா கண்டில், பாகிஸ்தான் ஆளில்லா விமானத் தாக்குதலை (ட்ரோன்) நடத்த முயன்றது. இந்தியா அதை சுட்டு வீழ்த்தியது.

கடந்த மூன்று நாட்களில், மூன்று டஜன் இடங்களில் பாகிஸ்தான் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக செய்திகள் வந்துள்ளன. இந்திய ராணுவம் மிகுந்த விழிப்புணர்வு மற்றும் உடனடித் தாக்குதல்களுடன் இந்தத் தாக்குதல்களை முறியடித்துள்ளது.
பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ளது. மே 9 9 (நேற்று) இரவு, பாகிஸ்தானின் 3 நகரங்களில் உள்ள விமானத் தளங்களை இந்தியா பதிலடி கொடுத்து அழித்தது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான், இன்று மீண்டும் இந்தியா மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதல்களை நடத்த முயன்றது. இருப்பினும், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை முறியடித்து சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்திய ராணுவத்தால் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், அமிர்தசரஸில் உள்ள காசா கண்டில் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் பறந்து செல்வது காணப்பட்டது.