இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தப்படுகிறது:வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியாவின் டிஜிஎம்ஓவை பாகிஸ்தான் அழைத்ததாகவும், மாலை 5 மணி முதல் நிலம், கடல் மற்றும் வான் மீதான அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாகவும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தப்படுகிறது:வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி போர் நிறுத்தப்படுவதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘பாகிஸ்தான் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரலை அழைத்து பேசியது. அதன் போது இரு தரப்பினரும் மாலை 5 மணி முதல் நிலம், கடல் மற்றும் வான் என அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த ஒப்புக்கொண்டனர்.’ என்றார்.