இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தப்படுகிறது:வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தப்படுகிறது:வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தப்படுகிறது:வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 10, 2025 06:17 PM IST

இந்தியாவின் டிஜிஎம்ஓவை பாகிஸ்தான் அழைத்ததாகவும், மாலை 5 மணி முதல் நிலம், கடல் மற்றும் வான் மீதான அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாகவும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தப்படுகிறது:வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தப்படுகிறது:வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இது குறித்து அவர் கூறுகையில், ‘பாகிஸ்தான் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரலை அழைத்து பேசியது. அதன் போது இரு தரப்பினரும் மாலை 5 மணி முதல் நிலம், கடல் மற்றும் வான் என அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த ஒப்புக்கொண்டனர்.’ என்றார்.

பாகிஸ்தான் இன்று பிற்பகல் 15:35 மணியளவில் இந்திய இராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் ஜெனரலை அழைத்தது பேசியது. அந்த பேச்சு வார்த்தையில் இந்திய நேரப்படி 17.00 மணி முதல் நிலம் மற்றும் வான் மற்றும் கடல் பகுதிகளில் அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இரு தரப்பினருக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது’ என்றார்.

இந்த புரிந்துணர்வை நடைமுறைப்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை எதிர்வரும் 12 ஆம் தேதி பகல் 12 மணிக்கு நடக்கும்.