Interim Budget 2024: நீலம் - கிரீம் புடவையைத் தேர்வு செய்த நிர்மலா சீதாராமன் - சுவாரஸ்யப் பின்னணி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Interim Budget 2024: நீலம் - கிரீம் புடவையைத் தேர்வு செய்த நிர்மலா சீதாராமன் - சுவாரஸ்யப் பின்னணி!

Interim Budget 2024: நீலம் - கிரீம் புடவையைத் தேர்வு செய்த நிர்மலா சீதாராமன் - சுவாரஸ்யப் பின்னணி!

Marimuthu M HT Tamil
Feb 01, 2024 10:49 AM IST

நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தல் 2024 நெருங்கி வருவதால் இது இடைக்கால பட்ஜெட்டாக அமையப்போகிறது.

நிதி அமைச்சகத்திற்கு வெளியே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் 2024 தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக எடுத்த புகைப்படம்
நிதி அமைச்சகத்திற்கு வெளியே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் 2024 தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக எடுத்த புகைப்படம்

நிர்மலா சீதாராமன் இந்திய ஆடைகள் மீது அக்கறை செலுத்தக்கூடியவர். கடந்த ஆண்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நவலகுண்டா எம்பிராய்டரியுடன் கையால் நெய்யப்பட்ட சிவப்பு இல்கல் புடவையைக் கட்டியிருந்தார். அது கர்நாடகாவின் தார்வாட்டைச் சேர்ந்த அமைச்சர் பிரகலாத் ஜோஷி வழங்கிய பரிசு ஆகும். பட்ஜெட் தினத்தன்று அவர் அணிய வேண்டிய அணியைத் தேர்ந்தெடுத்த பிறகு, அதன் மீது எம்பிராய்டரி வேலை செய்யப்பட்டது.

பட்ஜெட் 2024: முழு தகவல்: 

ஆஃப்-ஒயிட் அல்லது கிரீம் நிறம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிடித்த கலர் ஆகும். ஏனெனில், அவர் அடிக்கடி இந்த நிறத்தை அணிவதைக் காணலாம். சில முக்கிய தினங்களில் 2021ஆம் ஆண்டில், சிஹாராமன் சிவப்பு மற்றும் வெள்ளை போச்சம்பள்ளி சேலையை அணிந்திருந்தார்.

2022ஆம் ஆண்டில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு துருப்பிடித்த பழுப்பு நிற பொம்காய் புடவையைத் தேர்வு செய்து கட்டியிருந்தார்.

2020ஆம் ஆண்டில், அமைச்சர் நிர்மலா சீதாராமன், மெல்லிய நீல பார்டர் கொண்ட மஞ்சள் நிறப்பட்டு சேலையில் இருந்தார். 2019ஆம் ஆண்டில், அவர் தங்க பார்டர் கொண்ட இளஞ்சிவப்பு மங்களகிரி சேலையை அணிந்திருந்தார்.

2024 இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அமைச்சரின் செயல்பாடுகள்

கையால் நெய்யப்பட்ட புடவைகளைத் தவிர, அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் எப்போதும் இடம்பெறுவது, அவர் எடுத்துச் செல்லும் சிவப்பு புத்தகம் எனப்படும் பட்ஜெட் குறிப்புகள். அது இந்தாண்டும் டேப்பில் வைத்து பொதுமக்களுக்கு வழங்க இருக்கிறார், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.  

2019ஆம் ஆண்டில்,அவரது முதல் பட்ஜெட்டில் சிவப்பு புத்தகம் இருந்தது. 2021ஆம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட் காகிதமில்லாததாக மாறியது. அப்போது அவர் சிவப்புப் பை ஒன்றில் ஒரு டேப்லெட்டை எடுத்துச் சென்றார். அதில் இருந்து அவர் பட்ஜெட் ஆவணங்களைப் படித்தார்.

இடைக்கால பட்ஜெட் 2024 மிக முக்கியமானது. ஏனெனில் இது மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தின் கடைசி பட்ஜெட் ஆகும். இந்த ஏப்ரல் மாதம் தொடங்கும் 2024-25 ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதத்திற்கு அருகில் வளரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் ஒரு மறுஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் பொருளாதாரம் 2022-23ஆம் ஆண்டில் 7.2 சதவீதமாகவும், 2021-22ஆம் ஆண்டில் 8.7 சதவீதமாகவும் இருந்தது. பட்ஜெட் 2023 என்பது மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். அது மூலதன செலவினத்தை 33 சதவீதம் அதிகரித்து 2023-24ஆம் ஆண்டில் ரூ .10 லட்சம் கோடியாக உயர்த்த முன்மொழிந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம் ஆகும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.