Nigerian: பெற்றோர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி - கீழே குதித்த நைஜீரிய நபர்
பெற்றோர் இறந்த செய்தியைக் கேட்டு நைஜீரியா நபர் ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
டெல்லி நிஹல் விகார் பகுதியில் நைஜீரியனுக்கு ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது குடியிருக்கும் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதிகள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் குதித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
அந்த வீடியோவில், அந்த நைஜீரிய நபர் பால்கனிகள் சிறிது நேரம் தொங்கிக் கொண்டிருந்தார். பின்னர் கீழே விழுந்து வலியால் துடித்தது அதில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் ஆனது மார்ச் 18 ஆம் தேதி அன்று நடந்துள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நைஜீரியா நபரின் பெயர் டினோஜோ, நைஜீரியாவில் வசித்து வந்த இவரின் பெற்றோர் இறந்து விட்டனர். இந்த தகவல் இவருக்குக் கிடைத்துள்ளது. அதனைக் கேட்டு இவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த வருத்தத்தைத் தாங்க முடியாத டினோஜோ வீட்டின் பால்கனியில் இருந்து குதித்துள்ளார். குதித்த தாக்கத்தில் அவரது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் இரண்டாவது மாடிக் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்தவுடன் ஒரு நபர் உடனடியாக ஓடிச் சென்று உதவி செய்துள்ளார்.
அப்போது அந்த நபரை டினோஜோ கெட்டியாகப் பிடித்துள்ளார். விட மறுத்த காரணத்தினால் உதவி செய்யச் சென்றவர் தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடியுள்ளார். இதனை அறிந்த மக்கள் டினோஜோவை கடுமையாகத் தாக்கி உள்ளனர்.
பின்னர் அவரை காவல்துறையினர் வந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்