NEET PG 2024: தள்ளி வைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு! வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடக்கும் என அறிவிப்பு!
NEET PG 2024: நீட் முதுகலைத் தேர்வு கடந்த ஜூன் 22 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

ஒத்திவைக்கப்பட்டு உள்ள முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மருத்துவ முதுகலை படிப்புகளான நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ள நீட் முதுகலைத் தேர்வு காலை, மாலை என இரண்டு வேளைகளில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், "22.06.2024 தேதியிட்ட NBEMS அறிவிப்பின் தொடர்ச்சியாக, NEET-PG 2024 தேர்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது.
தற்போது வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று இரண்டு வேளைகளில் நீட் தேர்வு நடைபெறும், ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கட் ஆஃப் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருந்த நீட்-பிஜி நுழைவுத் தேர்வை ஜூன் 22ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்தது.
அதன் பிறகு மத்திய சுகாதார அமைச்சகம், மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியம் (NBEMS) மற்றும் அதன் தொழில்நுட்ப கூட்டாளியான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மற்றும் சைபர் செல் அதிகாரிகளுடன் பல கூட்டங்கள் நடத்தப்பட்டன. நீட்-பிஜி நுழைவுத் தேர்வின் செயல்முறைகளின் வலுவான தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்ய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
நீட் பிஜி என்றால் என்ன?
NEET PG என்பது நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளால் வழங்கப்படும் மருத்துவ முதுகலை படிப்புகள் ஆகும். MBBS படிப்புக்கு பிந்தைய DNB படிப்புகள், 6 ஆண்டு நேரடி MBBS படிப்புகள், DrNB படிப்புகள் மற்றும் NBEMS டிப்ளமோ படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நீட் பிஜி தேர்வுகள் தேசிய அளவில் நடத்தப்படுகின்றது.
NBEMS என்றால் என்ன?
சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள NBEMS, அங்கீகரிக்கப்பட்ட சிறப்புகளில் முதுகலை மற்றும் முதுகலை தேர்வுகளை நடத்துவதற்கு பொறுப்பு ஏற்கும் அமைப்பாகும், இது முறையே டிப்ளமேட் ஆஃப் நேஷனல் போர்டு (டிஎன்பி) மற்றும் டாக்டரேட் ஆஃப் நேஷனல் போர்டு (டிஆர்என்பி) ஆகிய விருதுகளை வழங்குகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
நீட் முதுகலை தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜூன் 22ஆம் தேதி, நீட் முதுகலை தேர்வை நடத்தும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம், பணத்திற்கு ஈடாக கேள்விகளை வழங்கலாம் என்று சமூக வலைதளங்களில் விண்ணப்பதாரர்களை ஏமாற்ற முயற்சிப்பதாக எச்சரித்துள்ளது. .
NEET-PG 2024 இன் கேள்விகளை கணிசமான தொகைக்கு வழங்குகிறோம் என்ற பெயரில் NEET-PG ஆர்வலர்களை ஏமாற்ற முயற்சித்ததற்காக NBEMS அத்தகைய மோசடி செய்பவர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுக்கு எதிராக பொலிஸ் புகாரைப் பதிவு செய்துள்ளது," என்று வாரியம் கூறியது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9
இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்