Bullet Train: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்: ஏலத்தில் முக்கிய 4 நிறுவனங்கள்!
Mumbai-Ahmedabad bullet train: லார்சன் & டூப்ரோ, NCC-J.Kumar, Afcons-KPTL Consortium மற்றும் Dineshchandra-DMRC ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளன.

மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையின் சி-3 தொகுப்பின் கீழ் ஷில்பாடா மற்றும் ஜரோலி இடையே 135-கிமீ சீரமைப்பு கட்டுமானத்திற்கான ஏலத்தை நான்கு நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளன.
லார்சன் & டூப்ரோ(L&T), NCC-J.Kumar, Afcons-KPTL Consortium மற்றும் Dineshchandra-DMRC ஆகிய நிறுவனங்கள் ஏலத்தை சமர்ப்பித்துள்ளதாக புல்லட் ரயில் திட்டத்தை கையாளும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையின் (புல்லட் ரயில் திட்டம்) மொத்த செலவு ரூ.1.08 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
புல்லட் ரயில் திட்ட அறிக்கையில், தேசிய அதிவேக இரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) M/s லார்சன் & டூப்ரோ லிமிடெட், NCC-J குமார் (JV), M/s Afcons -KPTL கூட்டமைப்பு மற்றும் M/s தினேஷ்சந்திரா- ஆகிய நிறுவனங்களிடமிருந்து நான்கு ஏலங்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தானே, விரார் மற்றும் போயிசர் HSR (அதிவேக ரயில்) நிலையங்களையும் உள்ளடக்கிய தொகுப்பு C-3க்கான பணிகளாகும்.