Mother Teresa : பல அவமானங்கள் சோதனைகள் கடந்து தொண்டு செய்தவர் அன்னை தெரசா.. அன்பின் ஒட்டுமொத்த உருவம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mother Teresa : பல அவமானங்கள் சோதனைகள் கடந்து தொண்டு செய்தவர் அன்னை தெரசா.. அன்பின் ஒட்டுமொத்த உருவம்!

Mother Teresa : பல அவமானங்கள் சோதனைகள் கடந்து தொண்டு செய்தவர் அன்னை தெரசா.. அன்பின் ஒட்டுமொத்த உருவம்!

Divya Sekar HT Tamil Published Sep 05, 2023 06:20 AM IST
Divya Sekar HT Tamil
Published Sep 05, 2023 06:20 AM IST

மக்களின் மனதில் அன்போடும்,கருணையோடும் போற்றபடுபவர் அன்னை தெரசா. இவரது புகழ் இம்மண்ணுலகம் இருக்கும் வரை போற்றப்படும்.

அன்னை தெரசா
அன்னை தெரசா

1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட்26 ஆம் தேதி தென் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. இவர் எட்டு வயதில் தனது தந்தையை இழந்தார். இவருக்கு படிப்பில் ஆர்வம் அதிகம் அவரது பாடபுத்தகத்தில் எந்த பாடப்பகுதியை கேட்டாலும் தடையின்றி சொல்லும் அளவுக்கு வல்லமை படைத்தவர்.

இவருக்கு சிறுவயதிலிருந்தே பொதுதொண்டில் மிகுநத ஆர்வம் கொண்டு இருந்தார். இவர் 18 வயதில் ஐரிஸ் கன்னிகாஸ்திரிகளை கொண்ட லொரேட்டா கத்தோலிக்க கன்னிகா மடத்தின் உறுப்பினராக இருந்தார். 

அதன் பின் கல்கத்தாவில் இந்திய மிஸனரிகள் செய்து வந்த சமூக தொண்டுகளில் அதிகம் ஈர்க்கப்பட்டார். எனவே இவர் டுப்ளீனில் சில மாதங்கள் பயிற்சி பெற்று பின் இந்தியாவுக்கு அனுப்பபட்டார். அதன் பின் ஆன்மிகத்தை தொடரும் விதமாக அயர்லாந்து சென்றார். பிறகு 1931-ஆம் ஆண்டு ஞானஸ்நானம் பெற்று அன்னை தெரசாவானார்.

இவர் 1931-ல் இருந்து 1948 ஆம் ஆண்டு வரை கல்கத்தா புனித மேரி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்துள்ளார். அதன் பின் 1948-ஆம் ஆண்டு பாட்னாவில் மருத்துவத்தில் செவிலியர் பயிற்ச்சியை பெற்றார். இவர் செய்யும் சமூக தொண்டுகளில் பல சோதனைகளை கடந்துவந்துள்ளார்.

இவர் தினமும் காலையில் நேரமாக எழுந்து தனது குழுவினருடன் உதவி வாங்கச் செல்வார். அப்போது ஒரு கடையில் உதவி கேட்கும் போது அந்த கடைக்காரர் கண்டும் காணாதது போல் இருந்தார். ஆனால் இவர் அதையும் மீறி கடைக்கார்யிடம் உதவி கேட்டார். அதற்கு அந்த கடைக்காரர் தனது வாயில் மென்று கொண்டு இருந்ததை அவர் கையில் துப்பினார். ஆனால் அவர் அதை பெற்றுகொண்டு இது எனக்கு நீங்கள் கொடுத்தது. அங்கு பசியில் வாடும் குழந்தைகளுக்கு ஏதாவது தாருங்கள் என கேட்டார்.

இதை கேட்ட அந்த கடைக்காரர் மனம்மாறி உதவி செய்தார். இம்மாதிரியான பல அவமானங்களையும், சோதனையயையும் தனது தினசரி வாழ்வில் அன்றாட நிகழ்வாக கடந்துவந்துள்ளார். தெரசா அவர்கள் கொல்கத்தாவில் இருந்த போது அங்கு உள்ள ஏழை மக்களின் நிலை. பசியால் வாடும் குழந்தைகள்,பல வியாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டு மிகுந்த வருத்தபட்டார்.

அச்சமயத்தில் அவர் பார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டா இல்ல பள்ளியில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டார். இவர் குழந்தைகளிடம் அன்பு, பாசம் காட்டி பாடத்தை கற்பித்தார். பிறகு அவர் கொல்கத்தாவிற்கு பணியிடைமாற்றம் செய்யப்பட்டார் அங்கு இவர் கற்பித்தல் பணியை தாண்டி சமூக பணிகளையும் செய்தார். இவர் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதை தாண்டி அவர்களுக்கு குளிப்பாட்டி, ஆடைமாற்றி அவர்களுக்கு சாப்பாடு ஊட்டினார். ஏழைமக்களை தேடி அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார்.

ஆசிரியாராக இருந்த தெரசா பின் பள்ளி முதல்வரானர். காலபோக்கில் தனது பணியை விட்டு முழு நேர சேவையில் இறங்கினார். தெரசாவுடன் சில மாணவியர் இணைந்து சேவைக்குழு ஒன்றை தொடங்கினர். மருத்துவ உதவி இல்லாமல் பெண் ஒருவர் உயிரிழந்ததைக் கண்டு தெரசா மிகுந்த வேதனையடைந்தார். உடனடியாக சிறிய மருத்துவானையைத் தொடங்கினார். அதில் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பட்டது.

1965ஆம் ஆண்டு அன்னை தெரசா தலைமையில் ரிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி இல்லம் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு சர்வநேச அளவில் புகழ்பெற்றுது. ஆதரவற்றோர்களுக்கும், தொழுநோயாளிகளுக்கும் அவர் செய்த தொண்டுகள் அளப்பறியது. ஏழை நோயாளிகளுக்கு வெறுமனே உதவி செய்பவராக மட்டும் அன்னை தெரசா இருக்கவில்லை.மாறாக அவர்களுடன் இணைந்து தமது வாழ்நாட்களை எல்லாம் அவர்களுக்காகவே செலவிட்டு தமக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல் எளிய வாழ்கை நடத்தியவர்.

உலகிலேயே மனித குலத்திற்கு சேவைகள் செய்ததற்காக அதிகளவு விருது பெற்ற நபராக அன்னை தெரசா இருந்தார். தெரசாவுக்கு 1952ஆம் ஆண்டு பொதுச்சேவைக்கான இந்திய பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அமைதிகான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. அவரது இடைவிடாத சமூக தொண்டை கெளரவிக்கும் விதமாக 1960ஆம் ஆண்டு இந்தியாலின் உயரிய விருதான் பாரத் ரத்தனா விருது வழங்கப்பட்டது. அவரது புகழ் இம்மண்ணுலகம் இருக்கும் வரை போற்றப்படும்.

அன்னை தெரசா 1983 ஆம் ஆண்டு இதய நோயால் பாதிக்கப்பட்டார். 1997 செப்டம்பர் ஐந்தாம் தேதி கொல்கத்தாவில் உயிரிழந்தார். இன்று அன்னை தெராசாவின் நினைவு தினம். இன்றைய தினம் அவரை நினைவு கூறுவோம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.