Income Tax: ரூ.50 கோடி வருமான வரி நோட்டீஸ்.. அதிர்ச்சியில் முட்டைக் கடைக்காரர் குடும்பம்.. நடந்தது என்ன?
எதிர்பாராத திருப்பமாக, மத்திய பிரதேசத்தின் பத்தாரியா நகரைச் சேர்ந்த ஒரு சிறிய முட்டை விற்பனையாளர் ஆபத்தான நிதி விசாரணையின் மையத்தில் சிக்கி இருக்கிறார்.

மத்தியப்பிரதேசத்தில் தள்ளுவண்டியில் முட்டை விற்பனை செய்யும் கடைக்காரர் ஒருவருக்கு ரூ.50 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பட்டதால் அவரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். மார்ச் 20 அன்று வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸில், மொத்தம் ரூ.49,24,57,217 வர்த்தக நடவடிக்கைகளின் விரிவான விவரங்களை வழங்கக் கோரியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் பத்தாரியா நகரில் சிறிய அளவில் முட்டை விற்பனை செய்து வருபவர் பிரின்ஸ் சுமன். கை வண்டியில் முட்டை விற்பனை செய்து வரும் பிரின்ஸ் சுமன், வருமான வரித்துறை அவரிடம் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி நடவடிக்கைகள் குறித்து விசாரணை நோட்டீஸ் அனுப்பியதில் அதிர்ச்சியடைந்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து அவரது குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களின் அன்றாட வாழ்வோடு இவ்வளவு பெரிய தொகை எப்படி தொடர்புடையது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் சிக்கிய பிரின்ஸ், இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துள்ளார்.
